புதன், 3 அக்டோபர், 2018

ஐ நாவின் ஏற்பாட்டில் 47 புலி தலைவர்கள் ... அதை தவிர்க்கவே ராஜபக்சே ஜோர்டான் சென்றார்?

புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பாகரன் உட்­பட 47 புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களின் பட்­டி­யலை அர­சாங்­கத்­திடம் கைய­ளிப்­ப­தற்­காக ஐ.நா. அதி­கா­ரிகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­திப்­ப­தற்கு எடுத்த முயற்­சியை தவிர்ப்­ப­தற்­கா­கவே இறுதி யுத்தம் முடி­வ­டை­வ­தற்கு சில நாட்கள் இருக்­கையில் மஹிந்த ராஜ­பக் ஷ ஜோர்­தா­னுக்கு விஜயம் செய்­த­தாக தகவல் தற்­போது வெளியா­கி­யுள்­ளது.
இறு­திக்­கட்ட யுத்­த­த்தின்­போது கடைசி இரண்டு வாரங்­களில் அப்­போ­தி­ருந்த ஜனா­தி­ப­தியோ பாது­காப்புச் செய­லா­ளரோ இரா­ணுவத் தள­ப­தியோ நாட்டில் இல்­லை­யெ­னவும் அந்த காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலிகள் கொழும்பின் மீது சென்­னைப்­ப­கு­தி­யி­லி­ருந்து வந்து விமானத் தாக்­குதல் நடத்­த­வுள்­ள­தாக வெ ளியான தக­வல்­களை அடுத்து இவர்கள் வெளிநாடு சென்­றி­ருந்­த­தா­கவும் அப்­போது தானே பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக செயற்­பட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூ­யோர்க்கில் இலங்­கை­யர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

ஜனா­தி­ப­தியின் இந்த கருத்துத் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஊடகம் ஒன்­றுக்கு கருத்த தெரி­விக்­கையில், யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்­தின்­போது கடைசி சில தினங்கள் தான் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு வெ ளிநாட்­டுக்கு சென்­றி­ருந்­தா­கவும் யுத்தம் முடி­வ­டைந்­தது தொடர்­பாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக 2009ஆம் மே 19ஆம் திகதி தானே அறி­வித்­த­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

நான் மேற்­படி தினங்­களில் ஜீ -11 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஜோர்­தானின் அம்மான் நக­ருக்கு சென்­றி­ருந்தேன். எவ்­வா­றா­யினும் அந்த மாநாட்­டி­லி­ருந்து இடை நடுவில் நாடு திரும்பி யுத்தம் முடி­வ­டைந்­தமை தொடர்பில் அறி­வித்தேன் என்றும் மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யுள்ளார்.

இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்­தத்­தின்­போது சில தினங்கள் மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டை விட்டு சென்­ற­மைக்­கான புதிய காரணம் தற்­போது வெ ளியா­கி­யுள்­ளது.
 அன்­றைய அர­சாங்­கத்தை சேர்ந்த முக்­கிய அமைச்சர் ஒருவர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ளார். விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உட்­பட 47 புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களை காப்­பாற்­று­வ­தற்கு ஐ.நா. சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது.
இதற்­கான பட்­டி­யலும் தயா­ரிக்­கப்­பட்­ட­துடன் அது குறித்த பேச்­சுக்­களும் நடை­பெற்­றி­ருந்­தன. அன்­றைய ஐ.நா. செய­லாளர் பான் கீ மூனும் தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு பொறுப்­பான அதி­காரி நம்­பி­யாரும் இலங்­கைக்கு விஜயம் செய்து இவ்­வி­டயம் குறித்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் கலந்­து­ரை­யாட எண்­ணி­ருந்­தனர்.

 இந்தச் சந்­திப்பை தவிர்ப்­ப­தற்­கா­கவே மஹிந்த ராஜ­பக்ஷ ஜோர்­தா­னுக்கு பய­ணித்­தி­ருந்தார். யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் ஐ.நா. சபை­யா­னது பெரும் குற்ற உணர்வுக்கு உள்ளாகியிருந்தது.
பெரும் இழப்பை தடுக்க முடியவில்லை என்று கருதி இருந்தது. இதனால்தான் பிரபாகரன் உட்பட 47 பேரை காப்பாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது. இதனை தவிர்ப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானுக்கு விஜயம் செய்திருந்தார் என்று அந்த அமைச்சர் தகவல் வெ ளியிட்டுள்ளார். இலக்கியா.இன்போ

கருத்துகள் இல்லை: