வெள்ளி, 5 அக்டோபர், 2018

கன்யாகுமரி ஆழ்கடலுக்கு சென்ற 1000 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை

கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லைதினத்தந்தி :கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. சென்னை : கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை மையத்தால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: