வியாழன், 4 அக்டோபர், 2018

மன்னார் 150 எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு - அகழாய்வு பணிகள் தொடர்கின்றன ...

வெப்துனியா :இலங்கையில் ஒரே இடத்தில் 150 எழும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் கட்டுமானப் பணியை தொடங்குவதற்காக குழியை தோண்டிய போது அதில் குவியலாக பிணங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் வேரெங்கும் பிணக்குவியல் இருக்கிறதா? என்பதை அறிய பல இடங்களில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது. skeleton இந்நிலையில் நேற்று ஒரு இடத்தில் குழி தோண்டியபோது 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது இலங்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
IBCTAMIL.com : மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள்அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார்மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரிசமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வுபணிகள் இடம்பெற்று வருகின்றது.


பல்வேறுகேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள்மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை அகழ்வுபணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரிஊடகவியலாளர்களை சந்தித்துஉரையாடல் ஒன்றை மேற்கொண்டார்
குறித்தஉரையாடலின் போது:- இதுவரை 151 மனிதஎச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும்அதிலும் 144 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.
தொடர்ந்துகருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி, கடந்த சில நாட்களாகதொடர்ச்சியான மழை பெய்வதனால் அகழ்வுபணிகளை மேற்கொள்வதில் சிரமம்
காணப்படுவதாகவும்அதனால் குறித்த வளாகம் முழுவதையும்மூட வேண்டிய தேவை இருப்பதனால்அவ் ஏற்பாடுகள் தொடர்பாக தெரியபடுத்தியுள்ளதாகவும் உள்ளூர் உற்பத்தி பொருட்களின்மூலம் பாதுகாப்பான முறையில் குறித்த வளாகத்தை மூடமுடியாத நிலை காணப்படுவதாகவும் அதனால்வெளி நாடுகளில் இருந்து குறித்த பொருளைஇறக்குமதி செய்வதற்கன ஏற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்
அதேநேரத்தில்ஊடகவியலாளர்களால் குறித்த வளாகத்தில் இருந்துஆடைகளுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் தடயப் பொருட்கள்கிடைத்தனவா? என வினவப்பட்டது.
குறித்தகேள்விக்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரிஇதுவரை ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த ஒரு தடயபொருட்களும் அடையாளப்படுத்த படவில்லை எனவும் ஆனாலும் அடையாளபடுத்தமுடியாத நிலையில் சில தடய பொருட்கள்கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் குறிப்பிட பொருட்கள்இவ்வகையை சேர்ந்தவை என்பது தொடர்பான துல்லியமானதகவல் அறியப்படவில்லை எனவும் தெரிவித்தார்
அதே நேரத்தில் இன்றய தினம் மன்னார்மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான அமெரிக்கா தூதரகத்தில் இருந்து அதிகாரி ஒருவர்வருகை தந்திருந்தம்மை குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இந்த பகுதி இராணுவ கட்டுபாட்டில் இருந்த பகுதி என்பதுடன் அண்மைக்காலம் வரை அந்த ஸதோச கட்டிடத்தில் இராணுவத்தினரே நிலை கொண்டிருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.