வெள்ளி, 6 ஜூலை, 2018

உத்தர பிரதேசம் மாணவியை 3 இளைஞர்கள் காட்டுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் விடியோவும் எடுத்தனர்

வெப்துனியா : உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னா எனும் பகுதியில் ஒரு பெண் 3 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மூன்று வாலிபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்து செல்கின்றனர்.
அந்த பெண் அவர்களிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சுகிறார். ஆனால், அதை ஏற்காமல் அந்த வாலிபர்கள் அவரை இழுத்து செல்கின்றனர்.
இதை மற்றொருவர் மொபைல் போனில் வீடியோவும் எடுக்கிறார்.இந்த வீடியோ வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கங்காகத் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இவர் முதல்வராக பதவியேற்ற பின்பே அங்கு பல்வேறு குற்ற சம்பவங்கள மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: