புதன், 4 ஜூலை, 2018

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- 23ம் தேதி மூன்றாவது நீதிபதி விசாரணை ...

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- 23ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார் மூன்றாவது நீதிபதி
மாலைமலர் : தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் வரும் 23-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார். சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வக்கீல்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்தார்.

அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.

நீதிபதி சத்யநாராயணன் தனது விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்கும்பட்சத்தில், அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: