வெள்ளி, 6 அக்டோபர், 2017

சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது ! கடுமையான நிபந்தனைகளுடன் சிறைத்துறை ...

 தினகரன் :பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் வீட்டில் தங்குவதாக மனுவில் சசிகலா கூறியுள்ளார். கடும் நிபந்தனையுடன் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. கணவரை தவிர வேறு யாரையும் சந்திக்ககூடாது என்றும் கட்சி மற்றும் அரசியல் காரணமாக யாரையும் சந்திக்ககூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  சிகிச்சை பெற்று வரும் கணவனை காண சசிகலா பரோல் கேட்டிருந்தார். சசிகலாவை அழைத்து வர  டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: