சனி, 7 அக்டோபர், 2017

சிவசேனா ராஜ்தாக்கரே :‘மோடி போன்ற பொய்யரை பார்த்தது இல்லை’

Chinnaia Kasi :மும்பை, ையும் பாஜக  நிறைவேற்றவில்லை; கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வந்து ஒவ்வொரு வரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார்; இதுகுறித்து கேட்டால் அவை தேர்தல் உத்திக்காக கூறப்பட்டது என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா-வே கூறுகிறார்; நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்பித்தான் அவருக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆதரவு அளித்தது; 
அக். 6 -  : அண்மையில், மும்பை யில் ரயில்வே மேம்பால நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து, சிவசேனா சார்பில் மும்பை ரயில்வே அலுவலகம் முன்பு வெள்ளியன்று பேரணி நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்தார்.“பாஜக ஆட்சியில் நாட்டை 2 அல்லது 3 பேர்மட்டுமே வழி நடத்திச் செல் வது போல் தோன்றுகிறது; நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த எந்தவொரு வாக்குறுதிய


ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு எந்த வொரு வளர்ச்சியையும் அடைந்ததாக தெரிய வில்லை; மோடியை நாங்கள்நம்பினோம்;
ஆனால் அவர் துரோகம் இழைத்து விட்டார்” என்று கூறிய ராஜ் தாக்கரே, மோடி முதல்வ ராக இருந்தபோது, தான் குஜராத் சென்றதாகவும், அப்போது மோடி தன்னைதவறாக வழி நடத்திவிட்ட தாகவும் குறிப்பிட்டதுடன், மோடியைப் போன்ற பொய்யர் ஒருவரை தன் வாழ்நாளில் சந்தித்தது கிடையாது என்றும் அதைதற்போதுதான் உணர்வ தாகவும் விளாசித் தள்ளினார்.பணமதிப்பு நீக்கம், யோகா, மேக் இன் இந்தியா போன்றவை பற்றியே மோடி பேசுகிறார்; ஆனால் இவையெல்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டவையே; உண்மையில் மக்களை காப்பாற்றுவதில் அவர் கவனம் செலுத்த வில்லை; பெட்ரோல் - டீசல் விலைகுறைப்பு மற்றும் பொரு ளாதாரம் பற்றி மோடி பேசிய பழைய வீடியோவும், இப்போது அவர் பேசும் வீடியோவும் மக்கள் மத்தி யில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன; பாஜக அரசின் கொள்கைகளை மக்கள் எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்;
அரசை விமர்சித்து மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள் என்று குறிப்பிட்ட தாக்கரே, மோடி பேசினாலே மக்கள்டி.வி.யை அணைத்து விடு கிறார்கள்; ரேடியோவில் ‘மான்கி பாத்’ என்று மோடிபேசுவதைக் கேட்டு மக்கள்விரக்திதான் அடைகிறார்கள் என்றும் சரமாரியாக போட்டுத் தாக்கினார்.புல்லட் ரயில்திட்டம் மும்பையிலும், அகமதா பாத்திலும் வசிக்கும் குஜராத்திகளுக்காக மட்டுமேகொண்டு வரப்பட்டது என்றும், இந்த திட்டத்தை எதிர்த்த காரணத்தால்தான் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பியூஷ் கோயல் நியமிக்கப் பட்டதாகவும் ராஜ் தாக்கரே குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை: