வெள்ளி, 6 அக்டோபர், 2017

சசிகலாவை சந்திப்போம்: 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!

பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குலோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 15நாட்கள் பரோல் கோரி சசிகலா மனு அளித்திருந்தார். இதையடுத்து அவருக்கு பரோல் வழங்க பெங்களூர் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சசிகலா குறைந்த பட்சம் 5 நாட்கள் வரை சென்னையில் தங்க உள்ளார்.இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்திக்க விருப்பம் முள்ளவர்கள், ஏற்கனவே சசிகலா மூலம்  சீட் வாங்கிய எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சசிகலா மீது உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் அவர் இங்கு வரும் போது சந்திக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் கூறியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக இந்த பஞ்சாயத்து ஓடியுள்ளது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி நானே சசிகலாவை சந்திக்க வேண்டும் இருப்பினும் இந்த சூழ்நிலையில் சந்திப்பது டெல்லிக்கு ஏற்புடையதாக இல்லை என கூறியிருக்கிறார்.ஆனால் அவரிடம் பேசிய அமைச்சர்கள், நாங்கள் சின்னம்மா மூலம் தான் பதவி, பொறுப்புக்கு வந்தோம், அம்மா இருக்கும் போதே சின்னம்மா தான் எங்களை பரிந்துரைத்தார். ஆகவே நாங்கள் அவரை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என கூறினார்கள். அதை கேட்ட எடப்பாடி, மீண்டும் ஒரு சிக்கல் வராமல் நீங்கள் பேசுங்ககள் என கூறியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சசிகலா பரோலில் வந்த நாளில் இருந்து தமிழக அமைச்சர்களான ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், ஆர்.பி.உதயகுமார், உட்பட கொங்கு மண்டல அமைச்சர்களான கே.சி.கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன், என 10 அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பெரும்பாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சுமார் 20 பேர் வரை சிசிகலாவை சந்திக்க உள்ளனர். இந்த தகவல்கள் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்துள்ளது. இது இன்னொரு குழப்பத்தை ஏறப்படுத்துமா? என்கின்ற விவாதத்தை அதிமுகவில் உருவாக்கியுள்ளது.

சசிகலா வந்து செல்லும் வரை நடக்கிற அரசியல் நிகழ்வுகள், அதன் பின்பு நடக்கிற புதிய அரசியல் சூழல், தமிழ்நாட்டில் நடக்கிற அதிமுக அரசியலில் பாஜகவின் பஞ்சாயத்து என அடுத்தடுத்து எதிர்பார்ப்பு கூடியுள்ளது.&">- ஜீவா தங்கவேல்</

கருத்துகள் இல்லை: