வெள்ளி, 20 அக்டோபர், 2017

திராவிட குடும்பங்களில் தீபாவளி .... சேரிகளில் கிருஷ்ணசாமிகளும் தடா பெரியசாமிகளும்

balasubramanian.saraswathy : இன்று இது ஈவெரா செத்த மண், வாழ்ந்த மண்
அல்ல.
சூத்திர திராவிட குடும்பங்களும், உறவுகளும், கட்சிகளும் சேர்ந்து அவரை கொன்று புதைத்துவிட்டு "இது பெரியார் மண் இது பெரியார் மண்" என்று கூவிக்கிட்டு அலைகிறார்கள்.
ஈவெரா வாழ்ந்த, வாழும் மண் சேரிகள் மட்டும்தான். அவரின் கொள்கைகளையும், அவரையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட ஆட்கள் அங்கு மட்டும் இன்றும் முழுமையாக வாழ்கிறார்கள்.
இன்னொரு முறை என்னிடம் தமிழ்நாட்டை பெரியார் மண், வெங்காய மண் என்று சொல்லாதீர்கள். "பெரியார் செத்துப் போன மண்" என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
இதே நிலை நீடித்தால் சேரிகளில் கிருஷ்ணசாமிகள், தடா பெரியசாமிகள், ஹிந்துத்துவா அம்பேத்கர்கள்.... உருவாவதை யாராலும் தடுக்க முடியாது

கருத்துகள் இல்லை: