சனி, 30 செப்டம்பர், 2017

கையால் மலம் ரயில்வே -- புல்லெட் ரயில் தேவையா? மோடி அரசை விளாசும் தாக்கரே

தினமலர் :மும்பை: இந்துக்கள் ஓட்டுக்களை
ஒருங்கிணைக்கவே  பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மத்திய அரசை குற்றம்சாட்டி பேசினார்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் மத்திய அரசின் செல்லாதநோட்டு அறிவிப்பு, ஜி.எஸ்.டி. மசோதா , எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை சிவசேனா கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வருகிறது.இந்நிலையில் தசரா பண்டிகையையொட்டி மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் பேசியதாவது, இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவே பா.ஜ.வுடன் சிவசேனா கூட்டணி வைத்ததே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. ஜி.எஸ்.டி.யால் வரி விதிப்பு முறை சீராக உள்ளது என்றனர். எங்கே சீராக உள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.செல்லாத நோட்டு அறிவிப்பை ஆதரிப்பவர்கள் ‛தேசபக்தர்கள்' என அழைக்கிறீர்கள் எதிர்ப்பவர்களை ‛தேசதுரோகிகள்' என அழைக்கிறீர்கள்.


பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரை நண்பராக்கிவிட்டீர்கள், காஷ்மீரில் கூட்டணியில் இருந்து கொண்டு ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மெகபூபா முப்தி மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள். தைரியம் இருந்தால் காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை நீக்க பா.ஜ.வால் முடியுமா. புல்லட் ரயில் திட்டம் இப்போது எதற்கு ...இருக்கும் ரயில்வே திட்டங்களின் உள்கட்டமைப்பு பணிகளை துரித்தபடுத்தலாமே இவ்வாறு உத்தவ் பேசினார்.

ராஜ் தாக்கரே எதிர்ப்பு

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே பேசுகையில், மும்பையில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை சீர் செய்யும் வரை எங்கள் மாநிலத்தில் புல்லட் ரயில் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை: