வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தன்ஷிகாவை மேடையில் பண்பற்று பேசிய டி.ராஜேந்தர் ... beep சிம்புவின் அப்பா அல்லவா?

விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராஜேந்தர், அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகாவை மேடையிலேயே விமர்சித்து அழ வைத்தார். நடிகர்கள் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் விழித்திரு படத்தை எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால் டி.ராஜேந்தரின் பெயரை மட்டும் விட்டுவிட்டார். இதனையடுத்து பேச வந்தார் நடிகர் டி.ராஜேந்திர் >அப்போது பேசிய அவர், நடிகை தன்ஷிகாவும் எனது பெயரை மறந்துவிட்டார். தன்ஷிகாவெல்லாம் என்னுடைய பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன். ஹன்சிகாவை பற்றியே கவலைப்படாதவன் தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன். மேடை நாகரீக என்று ஒன்று உள்ளது என்றார். இதனையடுத்து நடிகை தன்ஷிகா டி.ராஜேந்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும் விடாத ராஜேந்தர் நீ கட்டி வரவில்லை சாரி(சேலை) இப்ப கேட்கிற சாரி(மன்னிப்பு) என விமர்சனம் செய்தார். இதனால் நடிகை தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். வெப்துனியா


கருத்துகள் இல்லை: