திங்கள், 25 செப்டம்பர், 2017

ஜெ. கைநாட்டு உண்மையா? அன்றே அலசிய நக்கீரன்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். மூன்று தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க ஜெயலலிதா கையெழுத்து போட்டது, கைரேகை வைத்ததும் எப்படி? உடனே சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதேபோல் மேலும் சில அரசியல் தலைவர்களும் சிபிஐ விசாரணை தேவை என்று கோரி வருகின்றனர். நக்கீரன் நவ. 02-04 (2016) இதழில் கைநாட்டு! தொண்டர்கள் ஷாக்! தொடரும் சிகிச்சையும் சர்ச்சையும்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதே போல் அப்பல்லோவில் 2016 செப்டம்பர் 22 அன்று ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதிலிருந்து டிசம்பர் 5 வரை நடந்த பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறது நக்கீரன். இதனைத் தொகுத்து 'அப்பல்லோவில் ஜெ!' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். இதனைப் பெற, 9677081373 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும். ஆன்லைனில் பெற www.amazon.in

கருத்துகள் இல்லை: