புதன், 9 ஆகஸ்ட், 2017

தளர்வுற்ற மாநில அரசுகள், திமிர்பிடித்த மத்திய அரசுகள் என தொடர்ந்தால்

சாந்தி நாராயணன்: தன் கட்சியின் அதிகாரம் அனைத்தையும் ஒற்றை புள்ளியில் குவித்துவைத்ததின் விளைவை,
இன்று அடுத்தகட்டம் நகர இயலாமல் தேங்கிக்கிடப்பதின் மூலம்,
அனுபவித்து வருகிறது காங்கிரஸ் .அதிகாரம் கையில் இருந்த போது, தனது கட்சி மாநில ஆளுமைகள் மீதும்,கூட்டணியில் உள்ள பிற மாநிலக்கட்சிகள் மீதும் நாட்டாமைத்தனம் செய்த காரணம்,அதிகாரங்கள் அனைத்தும் யாரோ அனுபவிக்க தான் ஏன் உழைக்க வேண்டும் என்று காங்கிரசின் மாநில தலைமைகள் இயல்பிலே சோர்வுற்றுவிட்டன.காங்கிரசின் நிகழ்கால நிலை, துணைக்கண்டத்திற்கு வருகிற நாள் அதிகம் இல்லை. தொடர்ந்து நடுவண் அரசு எடுத்துக்கொள்கிற மாநிலத்தின் உரிமைகள்மாநில அரசுகளை ரப்பர் ஸ்டாம்புகளாக்கும்.மக்களின் உணர்வுகள்,தேவைகள் புரிந்திருந்தும் மாநிலக்கட்சிகள் ஊக்கமின்றிச் செயல்படும்.கூட்டாச்சித் தத்துவம் உடையும் , பொம்மை மாநில அரசுகள் அமையும்.விளைவு பாசிஸ்டுகள் கையில் தொடர்ந்து அதிகாரம் சென்றடையும்.தளர்வுற்ற மாநில அரசுகள், திமிர்பிடித்த மத்திய அரசுகள் என தொடர்ந்தால் துண்டுகளாகும் இந்தியம்.
ஒரு புள்ளியாய் தெரிகிறது அந்த நாட்கள் இன்றே !

கருத்துகள் இல்லை: