புதன், 10 மே, 2017

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

கோடநாடு பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2 வாகனங்களில் வந்த 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து 9பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கோடநாடு பங்களாவில் சோதனை நடத்தி வருகின்றனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை: