சனி, 13 மே, 2017

கிரண்பேடியின் அடுத்த அடாவடி :ஊழல் கண்காணிப்பு தனியார்வசம் ஒப்படைப்பு!

ஊழல் கண்காணிப்பு தனியார்வசம் ஒப்படைப்பு: கிரண்பேடிஅரசுத் துறைகளையும், பொது நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று தொழிலாளர்களும், அரசு ஊழியர்களும் போராடி வருகிறார்கள். . ஆனால் மத்திய அரசோ, அரசுத் துறைகளையும், பொது நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி வாட்ஸ்அப்பில் ஓர் அதிர்ச்சி செய்தியை அனுப்பியுள்ளார்.
“புதுச்சேரி மாநிலம் சிறிய அளவில் இருப்பதால், ஊழல்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ராஜ் நிவாஸ் பெயரில் ஒரு ஐ.டி-யும், வாட்ஸ்அப் எண் ஒன்றும் பொதுமக்களுக்குத் தெரிவித்திருந்தேன். அதில் ஊழல் புகார்கள்தான் அதிகமாக வருகிறது. ஊழல் புகார்களைக் கண்காணிக்கும் துறை செயல்படவில்லை. அதனால் ஊழல்களைக் கண்காணிக்கத் தனியார் ஏஜென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: