சனி, 13 மே, 2017

இளையராஜா இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு ! மோடி வடபகுதிக்கும் செல்லவேண்டும் நெடுமாறன் கூஜா!

troll mafia : டம்ளர் தொம்பி: அண்ணே மோடி இலங்கை போய்டாருனே இன்னும் நீங்க ஏதும் கண்டிக்கவே இல்லையே டம்ளர் சீமார்: கண்டிச்சா அதை மதிச்சு பயணத்தை கேன்சல் பண்ண மன்மோகனா இல்ல ரஜினியா? இது மோடிடா. என் காரு பணம், வந்த கதையிலிருந்து விஜயலட்சுமி கதைவரைக்கும் தோண்டி நொங்கெடுத்துறுவாருடா. அதனால் நாம வெயிட் பண்ணுவோம். ஏதாவது புள்ளபூச்சி இலங்கை கெளம்பும் அதை மிரட்டி வசூல்பண்ணிக்கலாம். தொழில்ல பொறுமை வேணும் தொம்பி. ... திராவிடத்தால் வீழ்ந்தோமடா தொம்பி
இளையராஜா வீடு முற்றுகைப் போராட்டம்! தந்தை பெரியார் திராவிடர் கழகம் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘’வரும் ஜூலை மாதம்  யாழிலும், கொழும்பிலும் இசை நிகழ்வு  நடை பெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக  இசைஞானி  இளையராஜா  கலந்து கொள்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார்  திராவிடர்  கழகத்தின் ஏற்பாட்டில் வரும் 14 .05 .2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11  மணியளவில்  சென்னையில் உள்ள இளையராஜா  வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அதைக் கருத்தில் கொள்ளாமல் சிறீலங்கா உலகை எமாற்றும் நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு இசை நிகழ்வு நடத்துகின்றது.  இந்  நிகழ்வில் இளையராஜா  பங்கு பற்றக்கூடாது என  முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழீழத்தில் இலங்கை இராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி  இரவு பகலாக பெண்கள் சிறுவர்கள் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல்  காணாமல் போனவர்களின் உறவினர்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த நிலையில் அங்கு நடை பெற இருக்கும்  இசை நிகழ்வில் இளையராஜா  கலந்து கொண்டு  இசை நிகழ்வு நடத்துவது  தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும் எனவே உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந் நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை: