செவ்வாய், 11 அக்டோபர், 2016

ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது புகார்!

ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்
சம்பத் மீது புகார்! " />இந்துக்கள் வெகு விமர்சியாக கொண்டாடும் ஆயுத பூஜையில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து வழிப்பட்ட புகைப்படம் ஒன்று அவரது சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆயூத பூஜையான இன்று அனைத்து இந்துக்களும் அவர்கள் தொழிலுக்கு முக்கிய ஆயுதமாக பயன்ன்படும் கருவிகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம் இந்துக்கள் அல்லாத பிற மத தொழிலாளர்கள் கூட ஆயுத பூஜையான இன்று அவர்களுடைய தொழிலுக்கு பயன்படும் கருவிகளை வைத்து வழிபாடு செய்வார்கள். ஆனால் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான அர்ஜூன் சம்பத், இன்று கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்வது போன்ற புகைப்படம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.


மேலும் இது குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர், தடா.ஜெ. அப்துல் ரஹீம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அர்ஜூன் சம்பத் வழிபாட்டின் போது பயன்படுத்திய துப்பாக்கி அரசு அனுமதி பெற்றதா என்று அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட இந்திய சட்டத்தில் அனுமதி உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை வைத்து வழிபட்ட அர்ஜூன் சம்பத் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.    ://ns7.tv/ta

கருத்துகள் இல்லை: