வெள்ளி, 14 அக்டோபர், 2016

ரஷ்யா திட்டவட்டம் :ஸ்னோ டென்னை நாடுகடத்த முடியாது

மின்னம்பலம்,காம்  ஸ்னோடெனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவோ அல்லது எங்கள் நாட்டில் இருந்து நாடு கடத்தவோ ஒரு நியாமான காரணமும் இல்லை என்று கூறியிருக்கிறது ரஷ்யா. அமெரிக்க வரலாற்றிலேயே இருவரைக் கண்டுதான் அமெரிக்கா அஞ்சியது. ஒருவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, இன்னொருவர் எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தற்காலிக ஊழியராக இருந்த ஸ்னோடென் அமெரிக்க பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் உளவு பார்த்த விஷயங்களை ஆதாரங்களோடு போட்டு உடைத்து அதிர வைத்தவர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.
அவரை ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கிறது ரஷ்ய அரசு. முதலில் ஸ்னோடென்,தற்காலிகமாக, ஒரு வருடம் ரஷ்யாவில் தங்கியிருக்க ரஷ்ய அரசு புகலிடமளித்தது. 2014 ஆம் மேலும் மூன்று ஆண்டுகள் ரஷ்யாவில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில்,இவ்வாரத்தின் தொடக்கத்தில்,ஸ்னோடென் தொடர்பாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ராவ், ‘மாஸ்கோ தான் ஸ்னோடெனை பணியமர்த்தியிருக்கிறது எனச் சொல்வது முட்டாள்தனம்.ஸ்னோடென் ரஷ்ய விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட போது, அவரை அமெரிக்க அரசிடம் ஒப்படைக்க எந்த சட்ட காரணங்களோ, தார்மீக காரணங்களோ இருந்திருக்கவில்லை. தவிறவும் எங்களுக்குள் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தமோ. நாடு கடத்தல் ஒப்பந்தமோ கூட இல்லை. ரஷ்யா ஸ்னோடெனை பணியமர்த்தவில்லை, பல தற்செயல் சம்பவங்களின் தொகுப்பால் தான், அவர் மாஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்” என்று கூறியிருக்கிறார்.ரஷ்யாவில் இருக்கும் ஸ்னோடெனை இந்திய எழுத்தாளர் அருந்ததிராய் சமீபத்தில் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: