திங்கள், 10 அக்டோபர், 2016

2G கதைவசன கர்த்தாக்களின் நிலக்கரி சுரங்க ஏல தில்லு முல்லு... ஊரை ஏமாற்றிய வினோத் ராய்

இந்தியாவின் தலைசிறந்த கற்பனை கணித மேதை வினோத்ராயின் தப்புத்தாளங்கள்
2G ஏலம் VS நிலக்கரி சுரங்க ஏலம்
வினோத்ராய் 2G யில் கணக்கு போட்டபோது சம்பந்தமேயில்லாமல் 3G ஏலத்தை 2G ஏலத்துடன் ஒப்பிட்டு கற்பனையாக 172000 கோடி நஷ்டம் என்ற புருடாவை பதிவு செய்து இந்திய மக்களை தவறாக திசை திருப்பினார். சமீபத்திய 2G ஏலம் இவர் இட்டுகட்டி விட்ட புருடா மிகப்பெரிய பொய் என நிரூபித்தது.
ஆனால் இவர் நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்படாததால் 186000 கோடி என கணக்கிட்டுருந்தார்.
ஆனால் உண்மை நிலை முற்றிலும் வேறு என்பதை சமீபத்திய நிலக்கரி ஏலம் நிரூபித்துள்ளது.
மொத்தம் 204 பிளாக்குகளில் 32 பிளாக்குகள் ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு 2,07,000 கோடி வருமானம் வந்துள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள 172 பிளாக்குகளை ஏலம் விட்டால் அரசுக்கு சுமார் 11 லட்சம் கோடி வருமானம் கிடைக்கப்போகிறது.
ஆனால் வினோத்ராய் 1.86 லட்சம் கோடிதான் என நஷ்ட கணக்கு போட்டு சொல்லிவிட்டார்.
இவர் 2G விசயத்தில் கற்பனையாகவும் நிலக்கரி விசயத்தில் உண்மையை மறைத்து நட்டத்தை குறைத்தும் காட்டியுள்ளார்.
இவருடைய கணக்குகளுக்கு பின்னே எந்த நபர் இருந்தார் என்பதே டிரில்லியன் டாலர் கேள்வி.
Antony Parimalam  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: