வியாழன், 13 அக்டோபர், 2016

தாம்பரத்தில் அ.தி.மு.க. தொண்டர் (மனநிலை சரியில்லாதவர்) நடுரோட்டில் தீக்குளித்தார் .. மருத்துவமனையில்

தாம்பரத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாததால்
மனமுடைந்த அ.தி.மு.க. தொண்டர் நடுரோட்டில் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் தீக்குளிப்பு தாம்பரம் கடப்பேரி மவுலானா நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சற்குணம் (வயது 31). அ.தி.மு.க. தொண்டரான இவர், காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், கடந்த சில தினங்களாக சற்குணம் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப் படுகிறது. இந்த நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஏற்றுமதி வளாகத்தின் எதிரில் உள்ள சிக்னல் பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சற்குணம் வந்தார். அப்போது திடீரென நடுரோட்டில் தனது உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றிய அவர், முதல்- அமைச்சர் குணமடைய வேண்டும் என்று கத்தியபடி தீக்குளித்தார்.


ஆஸ்பத்திரியில் அனுமதி

இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போக்குவரத்து போலீசார் தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவல் அறிந்ததும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் சற்குணம் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  தினத்தந்தி

கருத்துகள் இல்லை: