வியாழன், 27 பிப்ரவரி, 2014

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாகிஸ்தான் பாடகர் சுட்டுக் கொலை Wazir khan AFRIDI shot dead


பெஷாவர்:பாகிஸ்தானில் பாடகர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானின் பிரபலமான நகரம் பெஷாவர். இங்கு பஷ்டு மொழி பாடகர் வாசிர் கான் அப்ரிடி என்பவர் பிரபலமாக விளங்கினார். கைபர் ஏஜென்சி சார்பில் இவர் பல இடங்களில் பாடல்கள் பாடி வந்தார். இவர் பாடுவதை நிறுத்த வேண்டும் என்று தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். அதை பொருட்படுத்தாத வாசிர் கான், தொடர்ந்து பாடி வந்தார். அதனால் 3 முறை இவரை தீவிரவாதிகள் கடத்தினர். பின்னர், மீண்டும் பாட கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவரை தீவிரவாதிகள் விடுவித்தனர். இந்நிலையில், பெஷா வர் புறநகர் பகுதியான பக்கிர் கிலே என்ற இடத்தில் நேற்று திடீரென புகுந்த தீவிரவாதிகள், பாடகர் வாசிகர் கானை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். - tamilmurasu.org 

கருத்துகள் இல்லை: