வெள்ளி, 12 அக்டோபர், 2012

நாஞ்சில் சம்பத் ஆவேசம்! மதிமுகவில் இருந்து ஒதுக்க சதி!

நாஞ்சில் சம்பத் வைகோவிடம் இருந்து கழருகிறார் அம்மாவின் ஆசியும் தாமரையின் கனிவும் இருக்கவே இருக்கிறதே 
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்து வெளியேற, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் அவர் இணையவதற்கான சில வேலைகளை அதிமுகவினர் சிலர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில்,
ராமநாதபுரத்தில் பேசிய அவர், மதிமுகவில் இருந்து என்னை ஒதுக்கி வைக்க ஆளும் கட்சி முயல்கிறது. கட்சியின் பொதுச்செயலாளருக்கும், தனக்கும் விரோதம் ஏற்படுத்தும் விதத்தில் சில ஊடங்களும் பெரிதுபடுத்துகின்றன. நான் ஒருபோதும் கட்சியின் பொதுச்செயலாளருக்கோ, கட்சிக்கோ துரோகம் இழைப்பவன் அல்ல.செத்தாலும் வைகோவின் காலடியில் சாவேனே ஒழிய மதிமுவைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன். இன்றைய மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, நான் வெளிநாட்டு பயணம் போயிருந்த நிலையில், இந்த ஆளும்கட்சி நாஞ்சில் சம்பத் கட்சி மாறுகிறார் என்று பெரிதுபடுத்துகிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்றார்.

கருத்துகள் இல்லை: