செவ்வாய், 9 அக்டோபர், 2012

வீட்டை விட்டு ஓடி... ரயில்வே ஸ்டேஷனில் உணவு தண்ணீரின்றி மயங்கிவிழுந்த நடிகை!

வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியேறிய தெலுங்கு நடிகை திவ்யா, ரயில் நிலையத்தில் உணவு தண்ணீரின்றி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தெலுங்கில் ஒக ரொமான்டிக் க்ரைம் கதா படத்தில் கவர்ச்சியாக நடித்தவர் திவ்யா. இந்தப் ப டம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது.
சினிமாவில் ஜெயித்தாலும் வீட்டில் பல தொல்லைகளுக்கு ஆளாகிவந்தார் திவ்யா. அவர் சொத்துக்களை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, சொந்த சித்தப்பாவே ஏகப்பட்ட கொடுமைகளை செய்து வந்தாராம். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல், வீட்டை விட்டே ஓடிவிட்டாராம் திவ்யா.
அப்படி ஓடியவர், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கே சாப்பாடு தண்ணீர் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டவர், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார்.

அவரைப் பின்னர் அடையாளம் தெரிந்து கொண்ட சிலர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனிருக்கும் திவ்யாவின் அம்மா, "இனி என் மகள் மனசு கெடாமல் பாத்துக்கறோம்...," என்று சொல்லி வருகிறாராம்

கருத்துகள் இல்லை: