வியாழன், 2 டிசம்பர், 2010

ஸ்ரீரவி எனும் புலித்தோல்போர்த்திய நரி ஜேர்மன் தமிழ் மக்களின் உதிரத்தை உறிஞ்சுகின்றது. TRT

புலிகளின் பெயரால் வயிற்றுப்பிளைப்பு நாடாத்தி வந்த தமிழ் ஊடகங்கள் மற்றும் புலித்தொழிலாளர்களுக்கிடையேயான பங்கீட்டுப் பிரச்சினைகள் தொடர்கதையாகவே உள்ளது. மாவீரர் தினம் எனும் நாடகத்தின் பேரால் கொத்துரொட்டி முதல் புலிச்சின்னம் வரை விற்று சேகரித்த பணத்தினை பங்கிடுவதில் தற்போது புலிகளிடையே வெட்டுக் கொத்துக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு நகைப்புக்குரிய விடயம் யாதெனில் ஜேர்மனியில் இடம்பெற்ற மாவீரதின நாடகத்தில் ரிஆர்ரி வானொலி பங்குகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் அதிருப்தியடைந்துள்ள ரிஆர்ரி வானொலி நிர்வாகத்தினர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் இந்நிகழ்வில் தம்மை கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த ஸ்ரீரவி புலித்தோல் போர்த்திய நரி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் , தமிழ்க்குருதி குடிக்க நினைக்கும் கயவனே உன்னை மக்கள் கழுவேற்றும் நாள் வெகு விரைவில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் ....

உலகளாவிய TRT வானொலி நேயர்களுக்கு, கடந்த 28ஃ11ஃ2010 ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நடந்த மாவீரர்தின நிகழ்வு பற்றி அனைத்து நேயர்களுக்கும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தோம். அதன்படி எமது நேயர்களும் அந்த நிகழ்வுக்காக காத்திருந்தனர், அய்ரோப்பிய நேயர்களைப்போல், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவில் தமிழகம், மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் ஜெர்மனியில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் அன்றைய தினம் நேரடி ஒலிபரப்பு செய்ய முடியாததற்காக மிகவும் வருந்துகின்றோம். அதற்கான காரணத்தை நேயர்களாகிய உங்களுக்கு விளக்கவும் வானொலி சார்பாக கடமைப்பட்டுள்ளோம்.. எங்களது வானொலியின் சார்பாக எமது சிறப்பு நிருபர் விமல் அவர்கள் மாவீரர் தின நிகழ்வை வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்ய அங்கு சென்றிருந்தார். ஆனால் ஸ்ரீரவி ஜெர்மனியின் தென்மாகாண பொறுப்பாளர் அதனை அனுமதிக்கவில்லை. இதற்கான காரணமும் எங்களுக்கு விளங்கவில்லை.

மாவீரர் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எங்களுக்கும் உரிமையுண்டு வரலாறுக்கடமையை செய்யவிடாமல் தடுப்பவர் எவராக இருந்தாலும் அவர் இனத்துரோகியாகவே கருதப்படுவார்.

ஒரு ஊடகத்தில் நமது வரலாற்றுக்கடமையை வெளியிட தடைவிதிப்பவர் புலித்தோல் போர்த்திய நரி மட்டுமல்ல இனத்துரோகியும் கூட. ஸ்ரீரவி ஒரு புலித்தோல் போர்த்திய நரி மட்டுமல்ல அவருடைய தொழில் வருமானம் ஆராயப்படவேண்டும் அவருடைய உண்மையான உழைப்பில் உருவானதா அவருடைய ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த அவ்டி கார் போன்றவை எம் இன மக்களின் இரத்தத்தால் உருவானதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

தமிழ்க்குருதி குடிக்க நினைக்கும் கயவனே உன்னை மக்கள் கழுவேற்றும் நாள் வெகு விரைவில் நடக்கும். தமிழனின் குருதியா வேண்டும் உனக்கு உன் குருதி உன் உடம்பில் இருக்காது. ஜெர்மனியின் ஸ்ரீரவியைப் போல் புலித்தோல் போர்த்திய குள்ளநரிகள் எவராக இருந்தாலும் அவர்களை தோலுரித்து அம்பலப்படுத்தி மக்கள் முன் நிறுத்துவோம் இது உறுதி என்று அனைத்து நேயர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.... என தெரிவிக்கப்பட்டுள்ளது....

மேலும் ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் இந்து ஆலயமொன்றினை அமைப்பதற்கதற்காக சேகரிக்கப்பட்டிருந்த பணத்தினை அபகரிக்க முற்பட்டதும் இதன் விளைவாக குறிப்பிட்ட விவகாரம் நீதிமன்று வரைச் சென்று தற்போது பணம் ஒருவருக்கும் பயனற்றதாக போகும் நிலையில் உள்ளமைக்கும் புலிகளின் நெடியவன் குழுவைச் சேர்ந்தவனான இவனே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கதாககும்.

அத்துடன் சமாதானகாலத்தில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை இலங்கைக்கு கடத்திய ஜேர்மன் பிராஜாவுரிமைபெற்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்விரு இளைஞர்களையும் புலிகளுக்காக அப்பொருட்களை கடத்துவதற்கு பணியில் அமர்த்தியது ஸ்ரீரவியே என தெரியவருகின்றது. மேலும் அவ்விரு இளைஞர்களில் ஒருவர் ஒருவாறாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தப்பியபோது தடயங்களை அழிப்பதற்காக அவரை புலிகள் மோட்டார் சைக்கிளால் அடித்து சதி மூலம் கொலை செய்திருந்தனர். இச்சதியின் பின்னணியிலும் இவனே உள்ளதாக தெரியவருகின்றது.

ரிஆர்ரி இவரிடமுள்ள அவுடி கார் பற்றி கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அதற்கு மேலாக ஜேர்மனியில் இவருக்கு இரு வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை: