வியாழன், 2 டிசம்பர், 2010

நாட்டிற்கு எதிராக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை

நாட்டுக்கு எதிராக சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டுவதில் பங்கு கொள்ளும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அரசு சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்‌ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விஜயங்களின் போது எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் புலம்பெயர் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்புகளை தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புலம்பெயர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதராவான செயறற்பாடுகளை தூண்டிவிட்டு தாம் பலனடைந்து கொள்ள பல்வேறுபட்ட எதிரான குழுக்களும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் சில அமைப்புகளும் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்பு சனல் 4வில் ஔிபரப்பப்பட்டு இலங்ககையினால் மறுக்கப்பட்ட காணொளியின் முழுத் தொகுப்பு என தற்போது மற்றுமொறு காணொளி ஔிபரப்பப்பட்டதும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: