சனி, 4 டிசம்பர், 2010

கந்தலான படங்கள்.படம் ஓடாதது குறித்து கருத்தரங்கு நடத்தினால் நன்றாக இருக்கும்.

சினிமாவை பொழுதுப்போக்கு மீடியாவாகதான் தமிழ் ரசிகர்கள் இன்னமும் பு‌ரிந்து வைத்திருக்கிறார்கள். இதனை பு‌ரிந்து கொள்ளாதவர்களின் நிலை என்ன என்பது, ப‌ரிதாபமே.

சமீபத்தில் வெளிவந்த நந்தலாலாவை அறிவு‌‌ஜிவிகள் அவர்களுக்கு தெ‌ரிந்த அத்தனை உலகப் படங்களுடனும், திய‌ரிகளுடனும் ஒப்பிட்டு‌ப் புகழ்ந்தனர். படமும் சென்னை சிட்டியிலுள்ள சில திரையரங்குகளில் சுமாராகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் படத்தில் வரும் செயற்கையான உடலசைவுகள், தலைகு‌னிந்து நிற்கும் நாடக பாவம் போன்றவை காஞ்சிபுரத்தை தாண்டி யாரையும் கவர்ந்ததாக தெ‌ரியவில்லை. பத்து நாள் தாண்டும் முன்பே பெட்டிகள் திரும்பிவிர ஆரம்பித்துவிட்டன.

நந்தலாலாவுடன் வெளியான கனிமொழி படத்துக்கு அறிவு‌‌‌ஜீவி ஆதரவுகூட இல்லை. ஒரே நாளில் படம் பப்படம். உத்தமபுத்திரன் மட்டும் தட்டுத் தடுமாறி போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் இன்றுவரைதான் என்கிறார்கள்.

நடிகர்களுக்கு கி‌ரிக்கெட் பயிற்சி கொடுப்பவர்கள் படம் ஓடாதது குறித்து கருத்தரங்கு நடத்தினால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: