திங்கள், 29 நவம்பர், 2010

ஆர்யாவுக்கு செருப்பு மாலை



                ஷார்ஜாவில் 5.11.2010 அன்று மலையாள திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 'நான் ஒரு மலையாளியானு' என்று தெரிவித்த ஆர்யா, தமிழ் சினிமாவைப் பற்றி கேவலமாக பேசினார். ஆர்யாவின் பேச்சை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாதுரை ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
 
ஆர்யா உருவப்படத்தக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர் ஆர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள “சிக்குபுக்கு” படத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம்.

தமிழ் சினிமாவில் சம்பாதித்து விட்டு தமிழ் நடிகர்களை கேவலமாக பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. ஆர்யா தாராளமாக தரமான படங்கள் எடுக்கும் மலையாள பட உலகுக்கு போகலாம்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: