வியாழன், 2 டிசம்பர், 2010

ஐரோப்ப நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 15 பேர் உயிரிழப்பு

ஐரோப்ப நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவினால் 15 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் விமானசேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன் விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.போலந்து நாட்டில் வெப்பநிலை -20 பாகை செல்சியஸிற்கு கீழ் சென்றதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ஜேர்மனியில் வெப்பநிலை -18 பாகைக்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இத்தாலியில் பெய்த பலத்த மழை காரணமாக பொம்பயி நகரில் இரண்டு ரோமானிய சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: