வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

சாவகச்சேரியில் துப்புரவு செய்யப்படாத காணிகள் நகரசபைக்கு சொந்தமாகிவிடும்

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் துப்புரவு செய்யப்படாமல்  காணப்படும் வெற்றுக் காணிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் நகரசபைக்குச் சொந்தமானதாகப் பொறுப்பேற்கப்படவுள்ளது என்று நகரசபைச் செயலாளர் செல்வி.வி.சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சாவகச்சேரியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒரு சில ஆட்களற்ற காணிகள் இதுவரை துப்புரவு செய்யப்படாமையால் அவை பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன.

இக்காணிகளின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் உரிய காணிகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் துப்புரவு செய்தல் வேண்டும்.

இல்லையேல் நகரசபை அந்தத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன் காணியைச் சபைக்குச் சொந்தமானதாக எடுத்துக்கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
www.tamil.daillymirror.lk

கருத்துகள் இல்லை: