புதன், 4 ஆகஸ்ட், 2010

300மாணவ, மாணவிகள் கைது.குடிபோதையில் ஆடிப் பாடிக்கொண்டிருந்த

புனே அருகில் கத்கி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற சிம்பயோசிஸ் நிர்வாக பயிற்சியியல் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் நண்பர்கள் தினத்தை கொண்டாட ஒரு பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு இரவு விடிய, விடிய நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
மது பானங்களை பருகி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக அமர்க்களப்படுத்தினர். இவர்கள் போட்ட சத்தம் காரணமாக அந்த பகுதியினர் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து உள்ளூர்வாசிகள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பண்ணை வீட்டை சுற்றிவளைத்தனர். குடிபோதையில் ஆடிப் பாடிக்கொண்டிருந்த 300 மாணவ மாணவிகளை கைது செய்தனர். பின்னர் 100 மாணவிகளை மட்டும் எச்சரித்து விட்டு விட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை: