சனி, 7 ஆகஸ்ட், 2010

மே 19, 2009 புலிகளின் தோல்வி நாள்! மக்களின் வெற்றி நாள்!!

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 1)
(சாகரன்)
புலி வெல்லும் என்பதைவிட அது கொல்லும் என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். இதனாலேவே நிலத்திலும் புலத்திலும் பலர் அவர்களை ஆதரிப்பது போல் பாசாங்கு காட்டி வந்தனர், சிலர் துணிந்து புலிகளின் மக்கள் விரோத பாசிச செயற்பாட்டிற்கு எதிராக விடாப்பிடியாக 30 வருடங்களுக்கு மேலாக போராடி வந்தனர், பல தியாகங்களையும் செய்தனர். புலிகளை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரவழிப்பவர்களுக்கு ஒன்று பொதுவானது அதுதான் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட மரணப்பயம். புலிகளின் குறி எதிலும் தவறலாம். ஆனால் தான் கொல்ல வேண்டும் என நினைப்பவர் இமயத்தில் இருந்தால் என்ன, இங்கிலாந்தில் இருந்தால் என்ன, இலுப்பைக் குளத்தில் இருந்தாலென்ன, குழாய் கிணற்றிற்குள் ஒளித்திருந்தாலும், பிரமிட்டிற்குள் மறைந்து இருந்தாலும் ஏன் வேறு ஒரு கிரகத்தில் மறைந்து குடியிருந்தாலும் குறி தப்பாது வெறியுடன் கொல்வர்;. இதற்கு அவர்கள் கற்பிணி வேடம் என்ன, கருமாதி வீட்டில் பிணமாகவென்ன, விருந்தோம்பல் வேடமென்ன, சிறுவர், சிறுமி என வேடமிட்டு யாரையும் பலயெடுக்கவும் பலிகொடுக்கவும் தயாராக இருந்தனர். இவை எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட நிகழ்வு மே 18 இல் நிகழ்ந்தது என்றால் மிகையாகாது.
பிரபாகரனைவிட இராணுவ அறிவில் பலம் பொருந்திய கருணா கூட அரச படைகளின் பாதுகாப்பில் முழுவதுமாக இருந்தாலும் மே 19 இற்கு பிறகுதான் புலிகளின் எல்லைக்குள் பிரவேசித்தார். அரசியல் சாணக்கியரும், போரட்டத்தில் பல வருட அனுபவமுள்ள வரதராஜப்பெருமாள் தனது மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்று தீர்மானித்த நாள் மே 19 அன்றுதான். புலிகளின் பல பொறிகளில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களை பொது இடங்களில் சந்திக்கலாம் என தீர்மானித்த நாள் மே 19. சம்மந்தர் முதல் மாவை வரை புலிகளின் பாதை பிழையானது என நழுவின மீன் போல் கதைக்கலாம் என்று முடிவெடுத்த நாள் மே 19. இலங்கை அமைச்சர்களும் அவர் தம் மனைவியரும் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு தொண்டு செய்வதற்காக, நாடா வெட்டப் புறப்படலாம் என தீர்மானித்த நாள் மே 19. 'துவக்குடன் எந்த அறுவானும் போராட்டம் என்று இனி வந்தால் முறத்தல் அடித்து விரட்டுவோம்' என்று வீரத்தாயாக தமிழ்த் தாய் வன்னியில் மாறிய நாள் மே 19. யாழ் நாக விகாரையும், நயினா தீவு நாகதீப விகாரையையும் இனித் தரிசிக்கலாம் என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த நாள். யாழ் பொம்மை வெளியில் உள்ள தமது பள்ளி வாசலை சென்று பார்வையிடலாம் என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த நாள். ஏன் கொழும்பில் மட்டும் முதலீடு செய்த தமது சொத்துக்களை சென்று பார்வையிடலாம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் முடிவு எடுத்த நாளும் இதே மே 19 தான்.
ஏன் கூவ மறந்த குயில்களும், ஆடலை நிறுத்திய மணில்களும் பாடவும் ஆடவும் ஆரம்பித்த நாள். பூக்க, காய்க மறுக்கப்பட்ட செடிகளும், மரங்களும் பூக்கவும் காய்கவும் அனுமதிக்கப்பட்ட நாள். வடக்கிலிருந்து தெற்கிற்கு, கிழக்கிலிருந்து வடக்கிற்கும், மேற்கிற்கும் சுதந்திரமாக செல்லலாம் என தமிழ் மக்கள் தீர்மானித்த நாள்.
தமிழர் தலைவர் கலைஞர் புலிகளை முழுமையாக விமர்சித்து அறிக்கைகள் விடலாம் என முடிவு செய்த நாள்.
புலம் பெயர் நாடுகளில் புலிச் சண்டியர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் வியாபார ஸ்தலங்களை பூட்ட மறுக்கலாம் என தீர்மானித்த நாள். புலிகளின் வலிந்த ஊர்க் கோலங்களுக்கு செல்வதில்லை என மக்கள் தீர்மானித்த நாள். புலம் பெயர் நாடுகளில் புலிகளின் முதலீட்டாளர்கள் புலிகளின் பணத்தை எவ்வளவும், எவ்வாறும் சுருட்டலாம் இனி வன்னிக்கு அழைத்து விரட்ட யாரும் இல்லை என 'தைரியமாக' முடிவெடுத்து திடீர் மில்லியனராக மாறிய நாள். புலம் பெயர் நாடுகளில் வங்கி கணக்கு மூலம் மாதப்படி வழங்கி வந்த பலர் 'ளவழி pயலஅநவெ' அடித்த நாள்.
எங்களுக்கு அப்பவே தெரியும் இவ்வாறு நடக்கும் என புலிகளின் புகழ்பாடிய அரசியல் ஆய்வாளர்கள் குத்துக்கறணம் அடித்த நாள். ஒலிபரப்பில் புலி புராணம் பாடத் தேவையில்வையென முடிவெடுத்து டக்ளஸை பேட்டியெடுக்கலாம் என முடிவு செய்த நாள்.
புலிகளுக்கு சரத் பொன்சேகா உட்பட கேபி, உருத்திரகுமார், நெடியவன் என பலர் தலைவர்கள் தேசியத் தலைவர்களாக பிரகடனப்படுத்திய நாள். சுரேஸ், சேரன் வகையறாக்களின்; புலித் தலைமை ஆசைகள் நிராசையான தினம். ஆனால் தொடர்ந்தும் வேறு எவ் வழியில் பிழைப்பை தொடர்ந்து நடத்தலாம் என சிந்திக் தூண்டிய நாள்.
இவையெல்லாம் எவ்வாறு நடந்தன என்ற சற்று பார்ப்போம்....

அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி,
ஜேஆர் ஜெயவர்த்தன:

'இயங்கங்களுடையே முரண்பாட்டை ஏற்படுத்துவேன்'. 'பகைமையை வளர்ப்பேன்'. 'அவர்களை மோதவிடுவேன்' 'இதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்துவேன்.' பலவீனப்படுத்துவேன்.' 'பின்பு இல்லாமல் செய்வேன்' என்று பேசித் திரிந்தனர்.
(தொடரும்....)
www.sooddram.com

கருத்துகள் இல்லை: