வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஸ்டாலின ்பிரார்த்தனை தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில்

தூத்துக்குடி : துணைமுதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் பிரார்த்தனை நடத்தினார். தூத்துக்குடியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணைமுதல்வர் ஸ்டாலின், திருவிழாவையொட்டி இன்று புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்திற்கு வந்தார். அவரை பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் வரவேற்றார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், ஸ்டாலினுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்து அவர் மீது புனிதநீர் தெளித்து, அவருக்கு பனிமய மாதா உருவப்படத்தை வழங்கினார். அப்போது, ஸ்டாலினும் பிரார்த்தனை செய்தார். பேராலயத்தில் இருந்து பத்து நிமிடத்திற்குப்பின், வெளியே வந்த ஸ்டாலினுக்கு, அங்கிருந்த பக்தர்கள் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு ஸ்டாலினும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: