புதன், 4 ஆகஸ்ட், 2010

ஜோய் மகேஸ்வரன், புலிகள் பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம்

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியமை பெரும் தவறு என்றும், பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் என்றும் ஜோய் மகேஸ்வரன் கூறியுள்ளார். ஜோய் மகேஸ்வரன் 2002-2005 வரை பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் அதன் பின்னர் குழுவில் இருந்து விலக்கப்பட்டவர். பேச்சுவாத்தையில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தமக்கு தாமே புலிகள் குழி தோண்டிவிட்டதாக கூறியுள்ள ஜோய் மகேஸ்வரன். இனிமேல் புலிகள் தழைப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் மஹிந்தவுடன் பேசுவதே ஒரே வழி என்றும் கூறியுள்ளார். அத்துடன் புலம்பெயர் மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழ் மக்களிற்கான புனர்வாழ்வு நடவடிகையினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் பேராசிரியர் எலியாஸ் அவர்களின் நினைவு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: