செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்,மிஸ்டர் ரோமியோ', `என் சுவாச காற்றே', `ஆனஸ்ட்ராஜ்'

மிஸ்டர் ரோமியோ', `என் சுவாச காற்றே', `ஆனஸ்ட்ராஜ்' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர் கே.எஸ்.ரவி. இவர், நேற்று மாலை 3 மணிக்கு கே.கே.நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். சிகிச்சை பலன் அளிக்காமல் கே.எஸ்.ரவி மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் தகனம் நேற்று இரவு 7.30 மணிக்கு ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள சுடுகாட்டில் நடந்தது.

மரணம் அடைந்த கே.எஸ்.ரவிக்கு வயது 45. அவருக்கு, சுமதி என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: