புதன், 31 டிசம்பர், 2025

நடிகர் விஜய் நடித்த படங்களின் வெற்றி தோல்வி விபரம்

 Kanchi Shiva Shiva  :   நடிகர் விஜய் நடித்த படங்களில் வெற்றி படம் எது தோல்வி படம் எது?
விஜய் இதுவரை நடித்த படங்களில் முழு பட்டியல் மற்றும் வெற்றி தோல்வி விபரம் 
1. நாளைய தீர்ப்பு -  தோல்வி
2.ரசிகன்- தோல்வி
3.தேவா - தோல்வி
4.ராஜாவின் பார்வையிலே - தோல்வி
5.விஷ்ணு - தோல்வி
6.சந்திரலேகா -தோல்வி
7.கோயமுத்துர் மாப்பிள்ளை - தோல்வி
8. பூவே உனக்காக - வெற்றி
9. வசந்த வாசல் - தோல்வி

சூரஜ்: திருத்தணியில் தாக்கப்பட்ட ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றாரா?

bbc.com -விஜயானந்த் ஆறுமுகம்  :   'வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
"அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை" என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது.  
ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடலூரில் குடிபோதையில் பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநரால் தந்தை, மகன் உயிரிழப்பு:

 hindutamil.in - வெற்றி மயிலோன்  : சென்னை: கடலூர் அருகே குடிபோதையில் ஓட்டுநர் இயக்கிய தனியார் பள்ளி வேன் மோதி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் வசிக்கும் மதி என்பவரும், அவரது மகன் மனோஜ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் 22.12.2025 அன்று காலை கோணூர் - பெண்ணாடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தனியார் பள்ளி வேன் மோதி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துவிட்டனர்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

வட இந்திய இளைஞரை வாளால் கொடூரமாக வெட்டிய தமிழக இளைஞர்கள்

 tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: "தமிழ்நாட்டில் இந்த புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
திருத்தணியில் வடமாநில இளைஞரை சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு காவல்துறைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்த அவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்றுள்ளார்.  
அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். 
இதை சுராஜ் தடுத்த நிலையில் அந்தச் சிறார்கள் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து? முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

Poaching: Devananda asks for UN ...

 tamilmirror.lk : கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால், குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 10க்கும் மேற்பட்ட முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.
நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிருக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் குறிப்பிட்டார்.

திங்கள், 29 டிசம்பர், 2025

எல்லை மீறும் காங்கிரஸ் தலைகள்? கோபப்பட்ட ஸ்டாலின்? அதே தவறை செய்யும் ராகுல்?

 tamil.oneindia.com - Shyamsundar :  சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து இருக்கிறார். உள்ளூர் தலைவர்கள் தனிக்காட்டு ராஜாக்கள் போல செயல்பட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கே காரணமாக மாறி உள்ளனர்.
இப்போது தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனி தனி தீவுகளாக செயல்பட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை அண்ணா நகரில் பயங்கர தீ விபத்து - தொழிலாளிகள் அலறல்

அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை - ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டால் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்!

 ceylonmirror.net  :ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டால் பொதுமக்கள் வீதிக்கு இறங்குவர்! – அநுர அரசுக்கு சஜித் அணி கடும் எச்சரிக்கை.
“ஊடக சுதந்திரத்தை முடக்கும் வகையில் அநுர அரசு செயற்பட்டால் இந்த அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம். பொலிஸார் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றனர்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு தற்போது ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றது.

திமுக அரசை விமர்சிப்பதா? காங். பிரவீன் சக்கரவர்த்திக்கு ஜோதிமணி எம்.பி. எதிர்ப்பு

 மின்னம்பலம் - Mathi : தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் என திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி முன்வைத்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள் ஆய்வு பிரிவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருந்தார். இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

20 இலட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்! ஜனவரி 5-ஆம் தேதி தொடக்கம்!

 நக்கீரன் :  கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த புள்ளி கோரியது. 
அதாவது 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது. 
அதில், ‘கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்பானது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையடுத்து டெல், ஏசர், லெனோவா, ஹச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டின. 

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள் .. அமெரிக்காவை விட அதிக அளவில்

 tamil.goodreturns.in  -Prasanna Venkatesh  : அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட (Deportation) விஷயம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது, 
குறிப்பாக விமானத்தில் இந்தியர்களை கொண்டு வந்த விதம் குறித்து கடும் விமர்சனம் எதிர்கொண்டது. 
இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி 'டான்கி ரூட்' (Donkey route) போன்ற ஆபத்தான வழிகளில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தான். 
இன்னும் சிலர் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது (Visa overstay) மற்றும் மாணவர் விசா விதிகளுக்கு மாறாக பகுதிநேர வேலைகளில் ஈடுபடுவது போன்ற குற்றத்திற்காகவும் நாடு கடத்தப்பட்டனர்.

திமுக அதிமுக பாஜகவோடு ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தும் பிரேமலதா கட்சி

 மின்னம்பலம் -Mathi  :  “2026 தேர்தல் சுவரு இன்னும் எத்தனை விசித்திரங்களைத் தருமோ” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
திமுக, அதிமுகன்னு ரெண்டு பக்கமும் தேமுதிக விடாம பேசிகிட்டுதான் இருக்கு..
இந்த களேபரத்துல விஜயகாந்தின் 2-வது வருஷ நினைவு நாளை குருபூஜையா நடத்துது தேமுதிக.. இதுக்கு சிஎம் ஸ்டாலின், இபிஎஸ்-ன்னு எல்லா கட்சித் தலைவர்களுக்கும் நேரில் போய் சுதீஷ் இன்விடேஷன் கொடுத்துகிட்டு இருக்காரு..
இதுக்கு நடுவுலதான், “தேசிய ஜனநாயக கூட்டணியில எங்களுக்கு 6 சீட் மட்டுமே ஒதுக்க முடியும்னு தகவலை வெளியிட்ட கட்சி அழிந்தே போகும்னு” பிரேமலதா சாபம் கொடுக்க பரபரப்பாகிடுச்சு.
பொறுய்யா… தேமுதிக யாரோடதான் கூட்டணி வைக்குமாம்? பிரேமலதா ஏன் சாபம் விட்டாங்களாம்?

சனி, 27 டிசம்பர், 2025

அமெரிக்க வலதுசாரி பாலக்காட்டு விவேக் ராமசாமி யார்

 Mo Jo  :  Loose lips sink ships...  நமக்கெல்லாம் "விவேக் ராமசாமி" பற்றி தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் நெடுங்காலம் வாழும் பாலக்காடு தமிழ் குடும்பத்தில் பிறந்த அமெரிக்க சங்கி. அமெரிக்க அரசியலில் காலூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் வலதுசாரிய கொள்கைகளை போற்றும் ஒருவர். பெரிய ஆச்சரியம் இல்லை.
நான் பார்க்கும் வரையில்,  அரசியலில் ஈடுபாடு கொள்ளும் அமெரிக்காவில் பிறந்த / அல்லது சிறு வயது முதல் அமெரிக்காவில் வாழும் முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கர்கள் தேர்ந்தெடுப்பது வலது சாரிய கட்சியாகவே இருக்கிறது. Bobby Jindal, Nikky Haley போன்ற முன்னுதாரணங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் வலதுசாரிகளை ஆதரிப்பவர்களுக்கு பிறந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

முன்னாள் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா கைதும் அதன் பின்னணியும்

 Suhan Kanagasabai  :  சென்னை சூளைமேடு கொலைவழக்கில் தான் செய்யாத கொலையை தார்மீகப் பொறுப்பேற்று இன்றும் அவ் வழக்கில் விசாரணைக்குச் சென்றுகொண்டிருக்கும் தோழர் டக்ளஸ் அவர்களின் பண்புகளில்  ஒன்று தன்னைச் சேர்ந்தவர்களைக் காட்டிக்கொடுக்காது கடைசிவரை காப்பாற்றுவது . 
25 வருடத்திற்கு முற்பட்ட ஒரு கைத்துப்பாக்கி , 2001 இல் .
ஒருசிலர் ஈ பி டி பி இலிருந்து பணம் ,துப்பாக்கி இவற்றோடு தலைமறைவாகியிருக்கிறார்கள்.
புலிகளால் வேட்டையாடப்பட்ட மிகக் கொடுமையான காலக்கட்டம் இறுதி 10 ஆண்டுகள்.
இயக்கங்களிலிருந்து துப்பாக்கிகளுடன் தப்பியோடியோர் அந்தத் துப்பாக்கிகளை விற்றே ஏதும் செய்யலாம் என்ற நிலை செய்திகளில் கூட இருந்தது. 
இராணுவத்திலிருந்து ஆயுதத்துடன் தப்பியோடியோர் துப்பாக்கிகளை விற்று பிடிபட்டு மன்னிப்பளிக்கப்பட்ட செய்திகள் ஏராளம் உண்டு.
இந்த மதுகந்த விவகாரமும் இப்படித் தப்பியோடிய ஒருவரால் ஏற்பட்ட சிக்கலாகவே இருக்க வாய்ப்பு.

காங்கிரஸ் திமுக கூட்டணி தள்ளாடுதே .. ஸ்டாலின் திருப்பி அடிப்பாரா?

 மின்னம்பலம் :  ஸ்டாலினிடம் ப.சி. ‘பாஸ்’ செய்த ’அந்த’ மெசேஜ் என்ன? சீண்டும் ராகுல் ‘கோஷ்டி’
திமுக கூட்டணியில டிசைன் டிசைனா குடைச்சல் கொடுக்கிற காங்கிரஸ் பத்திதான் சொல்றேன்யா..
ஐவர் குழுன்னு ஒன்னை அமைச்சு சிஎம் ஸ்டாலினுடன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமா பேச்சுவார்த்தை நடத்துச்சு.. கூட்டணியே கன்பார்ம் ஆகிடுச்சுன்னுதான் அறிவாலய வாசல்ல நின்னுகிட்டு செல்வபெருந்தகை பேட்டியும் கொடுத்தாரு..
அதுல என்னய்யா இப்ப சந்தேகம்?
திமுகதான் கூட்டணி கன்ஃபார்ம்னு நினைக்குது.. ஆனா, காங்கிரஸோ விஜய் கட்சிகிட்ட ரொம்பவே மும்முரமா பேசிகிட்டே இருக்கு..
இதுல சிஎம் ஸ்டாலின் கிட்ட ஒன் டூ ஒன் பேசுன மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுத்த பேட்டி திமுகவை ரொம்பவே அப்செட் ஆகிடுச்சு.. அந்த பேட்டியில, ‘கூட்டணியை பத்தியே ஸ்டாலின் இன்னும் எதுவும் சொல்லலை. டிசம்பர் 15-க்குள் சொல்லுங்கன்னு சொன்னோம்.. இன்னும் பதிலே வரலை.. எங்களுக்கு ஆட்சியிலயும் பங்கு வேணும்”எனு பல்டி அடிச்சு பேசியிருந்ததுதான் சிஎம் ஸ்டாலின் உட்பட திமுக சீனியர்களை ரொம்ப கோபப்படுத்தியிருச்சு..

95 இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு ஒருவாரம் - திமுகவின் எதிர்வினை?

 Sundara Cholan :  95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகி விட்டது.
அதற்கு எதிராக திமுக எவ்வித எதிர்வினையும் செய்ததாகத் தெரியவில்லை.
ஒரு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ கிடையாது.
அநியாயமாகப் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற அவர்களை நேரில் சந்தித்து, விண்ணப்பிக்க உதவி செய்வது போன்றவற்றை இந்நேரம் திமுக முன்னெடுத்து இருக்க வேண்டாமா? அப்படி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
அவசரமாக அள்ளித் தெளித்த கோலம் என்கிற கதையாக தயாரித்த வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தை அணுகலாம். பயனிருக்குமா என்பது வேறு விஷயம்.
என்ன தான் திட்டம் வைத்திருக்கிறது திமுக? பாஜக திட்டம் பலிக்காது என்று வசனம் மட்டும் போதாது.

வெள்ளி, 26 டிசம்பர், 2025

மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கு மேற்கில் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுமா?

இலங்கை வித்வா பெருமழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மலையக மக்கள் இனியும் அங்கு வாழ முடியுமா?
கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது . பல கிராமங்கள் அடியோடு அழிந்து போய்விட்டது. பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டனர்.
இவர்களில் பலர் நாட்டின் பெரும் சம தரைப்பகுதியான வடக்கு கிழக்கு மேற்கு பகுதிகளில் குடியேற கூடிய வாய்பினையே எதிர்பார்த்து உள்ளனர்.
மலையக மக்களின் வாக்கு வங்கியை நம்பி இருக்கும் மலையக அரசியல்வாதிகள் இந்த கருத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இந்த மக்கள் வேறு இடங்களுக்கு போய்விட்டால்  இவர்களை வைத்து அரசியல் செய்யவோருக்கு வில்லங்கம்தான்.
இது பற்றி ஒரு காணொளி பேட்டியை தேசம் நெட் காணொளி வெளியிட்டது!
இதில் பிரபல மலையக கவிஞர் எஸ்தர் நாதனியால் கலந்து கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் கனிமொழி போட்டி? எந்த தொகுதி? பரபரக்கும் திமுக!

 minnambalam  :திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி, இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம்னு ஒரு தகவல் அடிபடுதுய்யா.. இதை பத்தி திமுக வட்டாரங்களில் கேட்டப்ப, “2007-ல் கனிமொழி முதல் முறையா ராஜ்யசபா எம்.பி.யானாங்க.. 
அப்ப காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்.. அவங்க மத்திய அமைச்சராகல.. 2-வது முறையா 2013-ல் ராஜ்யசபா எம்.பியானாங்க.. ஆனால் 2014-ல் இருந்து மத்தியில பாஜக கூட்டணி ஆட்சிதான்..

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ிட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாதவைகளாக பிரகடனம்-

jafnamuslim : டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது 

இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி ஆழத்திற்கு இடிந்து விழுந்ததால், இந்த கிராமங்கள் மனித வாழ்விற்குப் பாதுகாப்பற்றதாக மாறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவி இயக்குநர் எல்.ஏ.கே.ரணவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 25 டிசம்பர், 2025

கோவை நட்சத்திர ஹோட்டலில் மோதல் – பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது

மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : கோவை பீளமேடு பகுதியில் ஹோட்டல் முன்பு , பார்ட்டி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை முன்விரோதம் காரணமாக தாக்கிய ஈரோடு பா.ஜ.க பிரமுகர் உட்பட 9 பேரை இன்று (டிசம்பர் 25) பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் மற்றும் இரு அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோபார்களில் மதுபானத்துடன் நடன நிகழ்ச்சிகளுக்குஏற்பாடு செய்யும் நிறுவனம் பிரபல பிக்டாடி . இந்த நிறுவனம் கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் கடந்த 20 ம் தேதி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன?

 வாழ்வியல் சிந்தனைகள் – 64 – ராதா  மனோகர்   
நாம் யார்? கடவுள் உண்டா? எம்மை சுற்றி நடப்பது என்ன? 
இதில் எந்த கேள்வி உதித்தாலும் உடனடியாக ஒரு ஆயத்த ஆடைகள் போன்ற  பதில்களை தர சகல சமயங்களும் வழிகாட்டிகளும் குருமார்களும் காத்திருக்கிறார்கள்!
எமது  கேள்விகளுக்கு பதில் சொல்வது மிகவும் தித்திப்பான ஒரு காரியமாக அவர்கள் எதிர்கொள்கின்றனர். எமது கேள்விகளில் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். 
அவர்களை பின்பற்றுபவர்களுக்கு சொர்க்கம் காத்திருப்பதாக நம்பிக்கை அளிக்கின்றனர் 
நாம் அவர்களின் பதில்களில் இருந்து தற்காலிகமான போதை உணர்வுகளை பெறுகிறோம்.
ஆனால் அறிவை பெறுகிறோமா என்றால் அனேகமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 

அவர்களிடமே இல்லாத அறிவை அவர்கள் எப்படி எமக்கு தரமுடியும்? 
நம்மை தங்கள் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளப்பண்ணியே எம்மை ஆட்டு மந்தைகளாக்கி விட்டார்கள். 
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அப்படியே  நம்பி பின்னால் சென்றததனால் எதையுமே சுயமாக சிந்திக்க முடியாதவர்களாகி விட்டோம். 

புதன், 24 டிசம்பர், 2025

1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 மின்னம்பலம் -Kavi : முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் 19.12.2025 மற்றும் 22.12.2025 ஆகிய நாட்களில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்றும் (டிசம்பர் 24) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அடுத்தவர் குடும்பங்களை சீரழித்த ஆறு நடிகைகள்

May be an image of one or more people, people smiling and text

 நண்பன்  :  மற்றவர்களின் குடும்பங்களை சீரழித்த 6 நடிகைகள் பற்றித்தான் இங்கே பேசப்படுகிறது…
முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது – குடும்பங்களை சீரழித்த நடிகைகள்.
முதல் நடிகை நம்முடைய K.R. விஜயா.
தமிழில் அவரை “சிரிப்பழகி” என்று அழைப்பார்கள்.
அவர் திருமணம் செய்துகொண்டது திரைப்பட தயாரிப்பாளரும் வட்டிக்கடன்காரருமான வேலாயுத நாயர் என்பவரை.
K.R. விஜயாவை திருமணம் செய்வதற்கு முன்பே அவருக்கு இன்னொரு குடும்பம் இருந்தது.
எப்படியிருந்தாலும், விஜயா பிடித்தது புளியங்கொம்பில் தான்.
வேலாயுதம் நாயர் விஜயாவுக்கு தங்கம், சொத்து, விமானம் வரை பரிசாக கொடுத்தார்.
இவ்வாறு வேலாயுதம் நாயரின் குடும்பம் விஜயாவால் சீரழிக்கப்பட்டது.

என்.டி.ஏ-வில் ஓபிஎஸ், டிடிவி - க்ரீன் சிக்னல் கொடுத்த ஈபிஎஸ்? உருவாகும் மெகா கூட்டணி... OPS TTV in NDA EPS

minnambalam.com - Kavi  : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. அதேசமயம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் ஒன்றிணைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என தமிழக அரசியலில் பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சித் திட்டங்கள் இருக்காது” - கனி​மொழி எம்​.பி hint

 hindutamil.in - இரா.கார்த்திகேயன் :  முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கும் ‘வெல்​லும் தமிழ் பெண்​கள்’ எனும் தலைப்​பிலான மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு பல்​லடம் அருகே வரும் 29-ம் தேதி நடை​பெறுகிறது. இதை​யொட்​டி, காரணம்​பேட்​டை​யில் நேற்று நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்ற திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி பேசி​ய​தாவது:
தமிழ் பெண்​கள் இல்​லாமல் யாரும் வெல்ல முடி​யாது. இந்த மாநாடு மிகப்​பெரிய வெற்​றியை உறுதி செய்​யும் மாநா​டாக அமை​யும். திமுக-வுக்கு ‘மேற்​கு’ சரி​யில்லை என்ற நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஆனால், மேற்கு என்​பது திமுக-​வின் கோட்​டை​யாகும். அதை மீட்​டெடுக்​கும் வகை​யில் இந்த மாநாடு அமை​யும். இந்த மாநாட்​டுக்​குப் பிறகு மகளிருக்கு சரிசம​மாக இடம் கிடைக்​கும்.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

காங்கிரஸிடம் நேரடியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்! காங்கிரஸ் தவேக ரகசிய பேச்சு வார்த்தை!

 tamil.oneindia.com -Rajkumar R  : சென்னை: பிரதமர் மோடிக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புதிய அரசியல் வியூகங்களை காங்கிரஸ் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த சூழலில்தான், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து, விஜய் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யு என் பி தலைமையை விட்டுக்கொடுக்க தயார்

பிரச்சினைகளைத் தீர்க்க அரசுக்கு திறமையில்லையேல் நாடே அழியும்: ரணில் விசேட  அறிக்கை - Murasu.lk

 வீரகேசரி : நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இந்த அரசாங்கம், ரணில் என்ற தனி மனிதனைக் கண்டு இந்தளவு அச்சமடைந்து, அவரை அரசியலில் இருந்து நீக்குவதற்கு ஏன் இவ்வளவு முயற்சிக்கிறது என்பதற்கான காரணங்கள் இப்போது மிகத் தெளிவாக வெளிப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தில் இருப்பவர்களின் பேச்சைப் போலவே அவர்களது செயல்களும் இருக்கும் என்று இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நினைத்ததுடன், அதனைத் தலைமேல் வைத்து நம்பினார்கள்.
நாட்டின் கையிருப்பு பூச்சியமாக வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை பொறுப்பேற்று கண்முன்னே அதைக் கட்டியெழுப்பிய மனிதனைப் புறக்கணித்துவிட்டு, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள், இன்று வீதிச் சந்திகளிலும் கடைகளிலும் நின்று அரசாங்கத்தைத் திட்டித் தீர்க்கின்றனர் என தலத்தா அத்துகோரல குறிப்பிட்டார்.

விசா புதுப்பிக்கச் சென்ற இந்தியர்களுக்கு அதிர்ச்சி: அமெரிக்காவின் புதிய சரிபார்ப்புக் கொள்கை அமல்

 ceylonmirror.net  -தமிழினி  : இந்த டிசம்பரில் தங்கள் பணி அனுமதிகளைப் புதுப்பிக்க நாட்டிற்குத் திரும்பிய நூற்றுக்கணக்கான இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள், இந்தியாவில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னறிவிப்பில்லாத
குறித்த விவகாரத்தால், நீண்ட காலம் தங்கியிருக்க நேரிடும் அபாயம் காரணமாக, சில ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்த உள்ளது.
டிசம்பர் 15 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடையில் நடந்த இந்த முன்னறிவிப்பில்லாத நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது! வேளாங்கண்ணி TO இலங்கை!

வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

 கலைஞர் செய்திகள் - KL Reshma  : வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முற்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான மெஸ்கலின் (Mescaline) போதைப் பொருள் பறிமுதல் செய்த போலீசார், இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்து ரகசியமாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திமுகவின் ‘234 வேட்பாளர்கள்’ ரெடி.. ஸ்டாலின் அதிரடி! கூட்டணி கட்சிகள் குழப்பம்

 மின்னம்பலம் - Mathi  : முன்னாடி ஒரு ப்ளாஷ்பேக்கை சொல்றேன்.. 2014-ல் மக்களவைத் தேர்தல் நடந்தப்ப தமிழகம் வித்தியாசமான களமா இருந்துச்சு.. அதிமுக கூட்டணியில சிபிஐ, சிபிஎம் எல்லாம் அப்ப ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாங்க.. ஆனா தொகுதிகளை ஒதுக்குறதுல உடன்பாடு ஏற்படாம போச்சு.. அப்ப அதிமுக தனிச்சே போட்டியிடும்னு ஜெயலலிதா அறிவிச்சாங்க.. அந்த தேர்தல்ல திமுக ஒரு அணி, இடதுசாரி கட்சிகள் ஒரு அணி, பாஜக ஒரு கூட்டணி, காங்கிரஸ் தனித்து போட்டியிட ரொம்ப பரபரப்பா இருந்தது களம்.. கடைசியில ஜெயலலிதா 37 தொகுதிகளில் ஜெயிச்சாங்க.. அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்ததாக 3-வது பெரிய கட்சியாக அதிமுக விஸ்வரூபம் எடுத்துச்சு..
ஆமாய்யா.. ரொம்ப முக்கியமான தேர்தல்தான் அது.. இப்ப எதுக்கு இந்த ப்ளாஷ்பேக்?
சொல்றேன்.. இப்ப 2026 எலக்‌ஷனும் நெருங்கிடுச்சு.. ஆனா தேர்தல் களம் அப்படி ஒன்னும் தெளிவா இல்லை…. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வருது.. எந்த கூட்டணியும் பைனலாகவும் இல்லை..

திங்கள், 22 டிசம்பர், 2025

கேரளாவில் சத்தீஸ்கார் மாநில தலித் தொழிலாளி பாஜக குண்டர்களால் அடித்து கொலை!

 கேரளாவில் சத்தீஸ்கார் மாநில தலித் தொழிலாளி அடித்து கொலை!
இவரை பங்களாதேஷில் இருந்து வந்தவர் என்ற சந்தேகத்தில் கேரளா பாஜக தொண்டர்கள் இந்த கொடூரத்தை செய்துள்ளார்கள்!
இந்த தலித் இளைஞனை அடித்துக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் இன் மற்றுமொரு கிளையான சனாதன சாந்தி மார்க்கத்தைச் சேர்ந்த அனு, பிரசாத், முரளி, ஆனந்தன் மற்றும் பிபின்..இவர்கள் கேரளா பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ஆகும் 
இவர்கள் மீது ஏற்கனவே வன்முறை வழக்குகள் உள்ளன.
இது மட்டுமல்ல கோவையை அடுத்துள்ள பாலக்காடும் 
ஒரு RSS/ பாஜக கலவர பூமிதான். 
இங்கும்  வெட்டு குத்துக்கு பஞ்சமில்லை. இங்கு நகராட்சியிலும் பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

2025-ஆம் ஆண்டில் உலகில் மக்கள் தொகை வீழ்ச்சி சவாலாக உருவெடுத்துள்ளது.

 மாலைமலர் : 2025 REWIND: சரியும் மக்கள் தொகை .. குழந்தை பிறப்புக்கு குட்டிக்கரணம் போடும் நாடுகள்  Population decline... Countries scrambling to boost birth rates - Is the human race slowly becoming extinct?
2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.
இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை- சென்னை

 மாலைமலர் : சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.
அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

மென்டல் செல்வராகவனை விட்டு கீதாஞ்சலி பிரிய காரணம் இதுதானா?

 tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனின் அனைத்து போட்டோக்களையும் கீதாஞ்சலி நீக்கியிருந்தார். இதன் மூலம் இவர்கள் பிரிய இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், செல்வராகவன் பற்றி திண்டுக்கல் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ், "சொன்ன நேரத்துக்கு படங்களை செய்யாததால் சில தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார்கள்..
Geethanjali Selvaraghavan dhanush

ராமேஸ்வரத்துக்கு ரயில் டிக்கெட் எடுக்காமல் வந்த 300 உ.பி. பக்தர்கள் பலரும் தப்பி ஓட்டம்

 மின்னம்பலம் - மதி : ராமேஸ்வரத்துக்கு மதுரையில் இருந்து ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 300க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வட மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் வந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநில பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் காலமானார்

ராதா மனோகர் :   இன்று இந்திய திரை உலகம் ஒரு மிக பெரிய ஆளுமையை "ஸ்ரீநிவாசன்" இழந்து விட்டது 
மறைந்த மலையாள நடிகர் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் விட்டு சென்ற இடத்தை நிச்சயமாக வேறு எவராலும் நிரப்ப முடியாது!
திரு ஸ்ரீநிவாசன் படங்களை பற்றி பேசும்போது அவரின் கதை வசனங்களை பற்றி பேசுவதா அவரின் நடிப்பை பற்றி பேசுவதா என்ற குழப்பம் நிச்சயமாக எல்லோருக்கும் ஏற்படும்.
மிக சாதாரண மக்களின் உள்ளத்தை உள்ளபடி தொட்டு பேசிய மகா மகா நடிகன் . அதை விட ஒரு கதை வசன மேதாவி!
அவரின் ஒவ்வொரு படங்களும் திரைப்பட பாடங்களாக பயில்வதற்கு உரியது.
சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வியலை வெறும் சோக காவியங்களுக்காக படைக்காமல் நகைச்சுவையோடு காட்சி படுத்துவது ஸ்ரீனிவாசனின் தனி சிறப்பு.
ஸ்ரீனிவாசனின் ஏராளமான படங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.

சனி, 20 டிசம்பர், 2025

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

 தினமணி : செவிலியர்கள் போராட்டம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடினோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது.

இந்தியாவிலேயே அதிக வாக்காளர்கள் தமிழகத்தில் நீக்கம்.. மே.வங்கம் நம்பர் 2.. முழு பட்டியல்

 tamil.oneindia.com  -Nantha Kumar R  : சென்னை: இந்தியாவிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக தமிழகத்தில் தான் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு டேட்டா பின்வருமாறு:
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அமெரிக்காவை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் தொடர்புள்ள 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு

 bbc.com -  டாம் ஜியோகேகன் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்  :  மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புகைப்படங்களில் இடம்பெறுவதால் மட்டுமே, அவர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் அதில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் எப்ஸ்டீன் தொடர்பாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) என்றால் என்ன?
2008-ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். ஆனால் எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை (plea deal) மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் – வரைவு வாக்காளர் பட்டியல் முழு விவரம்

 தினமணி : தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

வியாழன், 18 டிசம்பர், 2025

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா

தினமலர்: கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கிய கடல் புறா : உளவுக்காக அனுப்பப்பட்டதா என சந்தேகம்பெங்களூரு : கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடற்படை தளத்தை உளவு பார்க்க சீனாவால் அனுப்பப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது . சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா , கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளத்திற்கு அருகில் நேற்று ( டிசம்பர் பதினேழு ) கண்டெடுக்கப்பட்டது .

விஜய்க்கு ஓட்டு போடல.. வீட்டுல 9 பேருக்கும் சோத்துல விஷம் வைத்து விடுவேன்!

 minnambalam.com  - Pandeeswari Gurusamy  : நடிகர் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் இருக்கும் 9 பேருக்கும் சோத்துல விஷம் தான் என இளம் பெண் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் பெருந்துயரம் நடந்து 80 நாட்கள் கடந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். விஜய்யின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விஜயின் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவரிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த போது, விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் இருக்கும் 9 பேருக்கும் சாப்பாட்டுல விஷம் வைத்து விடுவேன் என்று தெரிவித்தது பெரும் அதிர்ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி வீட்டுச்சிறையில் மரணம்?

tamil.asianetnews.com : மியான்மர் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை என அவரது மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்துள்ளார்.மியான்மரின் இராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (80) பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால், அவர் உயிருடன் இருக்கிறாரா இறந்துவிட்டாரா என்றே தெரியவில்லை என அவரது மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கிம் அரிஸ், 2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகளாக தனது தாயுடன் பேசவில்லை என்றும், அவரது இதயம், எலும்பு மற்றும் ஈறு பிரச்சனைகள் குறித்து சில நேரங்களில் மறைமுகத் தகவல்கள் மட்டுமே கிடைப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

delh நாளை முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை - அதிரடி அறிவிப்பு!

zeenews.india.com   RK Spark  :டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா வெளியிட்டுள்ளார். நாளை வியாழக்கிழமை முதல் டெல்லியில் உள்ள எந்தவொரு பெட்ரோல் பங்கிலும், செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் வாகனத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லையென்றால், நீங்கள் எரிபொருள் நிரப்ப முடியாது. இதை சரிசெய்ய வாகன ஓட்டிகளுக்கு இன்று புதன்கிழமை ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

புதன், 17 டிசம்பர், 2025

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்

tamilmirror.lk அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரம் (50 வயது) என்ற நபர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகலவறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகையில்,

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியதில் சாஜித் அக்ரம் என்பவர் ஹைதராபாத்தின் டோலிசவ்கி நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

மலையகத்தில் வாழ்கின்ற மக்களை வட கிழக்கில் குடியேற்ற வேண்டும்! Esther Nathanial interview

சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதிரடி! அமலாக்கத்துறைக்கு செம்ம அடி!

  minnambalam :காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி என்ன?

  • ராகுல் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேருவால் 1937-ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட். இந்நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
  • இந்நிறுவனத்தின் சார்பாக 1938-ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் பத்திரிகை வெளியிடப்பட்டது

செவ்வாய், 16 டிசம்பர், 2025

எமில் சவுந்தரநாயகமும் யாழ்ப்பாண அமெரிக்க விமான தளமும்

May be an image of text that says "Missed Opportunity: America's Refusal to Establish an Airbase in Jaffna, Sri Lanka..! -By A Special Correspondent EmilSavundra Emil Savundra"

ராதா மனோகர் : எமில் சவுந்தரநாயகம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தளம் அமைக்க முயற்சித்த வரலாறு!
Emil  Savundranayagam  அமெரிக்க கொரியா போர் காலத்தில் (Korean War (25 June 1950 – 27 July 1953)
சீனாவுக்கு பெற்ரோலியம் விற்கும் வியாபாரியாக  தோன்றினார் . 
உண்மையில் இவர் அமெரிக்க ஏஜெண்டாக  செயல்பட்டு சீனாவை ஏமாற்றினார்.
சீனாவிற்கு பெற்ரோலியம் கிடைத்து விட கூடாது என்ற நோக்கத்தில் அமேரிக்கா இவரை பயன்படுத்தியது.
இரண்டு தடவைகள் இவர் சீனாவிடம் பணத்தை பெற்று சீனாவை ஏமாற்றினார் 

இலங்கை அரகலய போராட்டத்தை 45 நிமிடங்களுக்குள் அடக்கி விட முடியும் என்று இந்திய தூதுவர் .....

May be an image of dais and text
Gopal Baglay -   Mahinda Yapa Abeywardena 

சபாநாயகர் மகிந்த யாப்பா அபாயவர்தனா அவர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்க ஒப்புக்கொண்டால், 45 நிமிடங்களுக்குள் (அரக்கலய) நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற த உறுதி மொழியை  இந்திய தூதுவர் திரு கோபால் பாக்ளே அவர்கள் சபாநாயகருக்கு வழங்கினார்! 
இந்த அதிர்ச்சிகரமான தகவலை பேராசிரியர் சுனந்தா மதுமபண்டார அவர்கள் எழுதிய  அரக்கலயா பலாய என்ற சிங்கள மொழி நூலில் குறிப்பிட்டுள்ளார். 
இது பற்றி மேலதிக விபரங்களை லங்காவேப் என்ற பழம் பெரும் இணையத்தளத்தில் காணலாம்!
 .
lankaweb Lastly, the former parliamentarian has revealed that it was then Indian High Commissioner, in Colombo, Gopal Baglay (May 2022 to December 2023) who asked him to accept the presidency immediately. Professor Sunanda Maddumabandara, who served as Senior Advisor (media) to President Ranil Wickremesinghe (July 2022 to September 2024), disclosed Baglay’s direct intervention in his latest work, titled ‘Aragalaye Balaya’ (Power of Aragalaya).

திங்கள், 15 டிசம்பர், 2025

தவெக? திமுக? டெல்லி காங். மீட்டிங்கில் பரபர வியூகம்! - TVK? DMK? Congress

 மின்னம்பலம் -Mathi  :  டெல்லியில இன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட முக்கியமான மீட்டிங் நடந்துச்சு.. கூட்டணி விவகாரங்களுக்கான ஐவர் குழுதான் இந்த மீட்டிங்கை நடத்துச்சு.. கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு..
ஏற்கனவே சென்னையில சிஎம் ஸ்டாலினை சந்திச்சு பேசி திமுகவுடனான கூட்டணியை உறுதி செஞ்சிருந்தது இந்த ஐவர் குழு.. அதே நேரத்துல காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்திச்சு பேச கூட்டணி பத்தி லேசா குழப்பம் ஏற்பட்டுருச்சு..
இப்படியான நிலையில்தான் ராகுல் காந்தி, கார்கே, ஐவர் குழு எல்லாம் சேர்ந்து தமிழக தலைவர்களுடன் ஆலோசிக்கிறதுன்னு முடிவெடுத்தாங்க..

H-1B விசாவில் மாபெரும் முறைகேடு.. இந்தியாவில் - முன்னாள் அமெரிக்க அதிகாரி பேட்டி பகீர்

 tamil.oneindia.com   : Vigneshkumar  ; வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா பல கடுமையான விதிகளை விதித்து வருகிறது. 
சிலர் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி விசா குறித்து முன்னாள் விசா அதிகாரி ஒருவர் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆர்.எஸ்.பாரதி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!

 மின்னம்பலம் - கவி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14) உடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர்.

சனி, 13 டிசம்பர், 2025

கொத்மலை நீர்த்தேக்கம் - மனிதப்பேரழிவு - அதிகாரிகளின் அலட்சியம் இலங்கை அரசின் அனுபவம் இன்மை

 கம்பளயான் - Gampalayan  :  கொத்மலை - மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக ஆபத்தான நீர்த்தேக்கம்!
6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள, கடல் மட்டத்திலிருந்து 640 - 703 மீட்டர் உயரம்.
174 மில்லியன் கன மீட்டர் நீர் கொள்ளளவு.
முழுமையாகக் கறுப்புக் கற்களால் அடுக்கப்பட்டது.
15 மீட்டர் உயரம் மற்றும் 14 மீட்டர் அகலம் கொண்ட மூன்று வான்கதவுகள் மற்றும் ஒரு வான்கதவு கொண்டது.
இவை மூலம்  வினாடிக்கு 1850 கன மீட்டர் நீரை வெளியேற்ற முடியும்.
87 மீட்டர் உயரம், 600 மீட்டர் நீளம் மற்றும் உச்சியில் 10 மீட்டர் அகலம் கொண்ட அணையுடன், 544 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது  இந்த நீர்த்தேக்கம். 
1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கொத்மலை ஓயா மகாவலி கங்கையில் கலப்பதற்கு 6.6 கிலோமீட்டருக்கு முன்னர், 

பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது! காங்கிரஸ் கோட்டையை கூட்டிக்கொடுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர்

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj  : “பாஜகவின் வெற்றி தெளிவான சிக்னல்”- தனது கோட்டையில் பாஜக வென்றதை பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலில் சசி தரூரின் கோட்டையான திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு ஷாக் கொடுத்துள்ள நிலையில் இது மக்களின் தெளிவான ஆணை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது.
Shashi Tharoor Lauds BJP s Historic Thiruvananthapuram Civic Polls Win

மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் விரித்துள்ள உலக வலையமைப்பு! குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!


 இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 14 மசூதிகள் மீது ஆர் எஸ் எஸ் குறிவைத்துள்ளது 
இதற்காக பெருமளவு நிதியை பஹாமாஸ் தீவில் பதுக்கி வைத்துள்ளது.
வழறிஞர் திரு வாஞ்சிநாதன் இது பற்றி மிக தெளிவாக விபரமாக எழுதி உள்ளார்.
அவரின் அந்த கட்டுரை உங்கள் தூக்கத்தை தொலைத்து விடும்  

 நிலவினியன் மாணிக்கம் :   ஆர்எஸ்எஸ்ஸஸின் உண்மை முகம் மதக்கலவரத்தை தூண்டுவதை தோலுரித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. என்ன காரணம்?

 தினத்தந்தி   :சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை', ‘பனி விழும் மலர் வனம்', ‘பாக்கியலட்சுமி' போன்ற பல பிரபல டி.வி. தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.
ராஜேஸ்வரிக்கும், அவரது கணவர் சதீசுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு ராஜேஸ்வரி தாய் வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.

வெள்ளி, 12 டிசம்பர், 2025

நடிகை பாவனா- நடிகர் திலீப் பாலியல் வன்கொடுமை வழக்கு 6 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை நடிகர் திலீப் தப்பி விட்டார்

Latest Tamil News

 தினமலர் : திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2017ம் ஆண்டு பிப். 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கடத்திய ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை, செய்து அதை செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் மட்டுமல்ல, அம்மாநில திரையுலகமான மல்லுவுட்டிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பை (வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்) நிரபராதி என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Indigo Airlines ரூ.7,253 கோடி லாபம் ஈட்டிய இண்டிகோ! உறைய வைக்கும் அதிர்ச்சித் தகவல்!

Indigo Airlines Profit

 tamil.samayam.com  - ஆனந்தன் : இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை தற்போது மிகக் கடினமான நிதி சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. 
பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், பயணிகள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
 குறிப்பாக சமீப நாட்களில் இண்டிகோ விமானங்களில் நடந்த சேவை பாதிப்புகள் இந்தப் பிரச்சினையை மேலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
இண்டிகோ சேவை பாதிப்பு
பணியாளர் பற்றாக்குறை, திடீர் அட்டவணை மாற்றங்கள், புதிய பணி நேர விதிமுறைகளால் வந்த குழப்பங்கள் என பல காரணங்களால் இண்டிகோ ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய நேரிட்டது.

ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

 தினமலர் : புதுடில்லி : ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது, சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல், இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த, சாகின் மாலிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு : 
ஒருவர் மீது ஆசிட் வீசுவது மற்றும் ஆசிட்டை குடிக்க வைப்பது அவரது உயிருக்கே தீங்கு விளைவிக்கும் செயல். இதனை போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது. 

வியாழன், 11 டிசம்பர், 2025

இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம்!

 இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான்  நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும்  சென்று வரமுடியும்.
 நிரந்தரமாக தங்க முடியும் நிரந்தரமாக தொழில் செய்ய முடியும் வியாபாரம் செய்ய முடியும் .கல்வி கற்க முடியும்! சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது! விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.  

பாடகி சின்மயி - டாக்டர் பால் அடித்த கூத்து . முழுநேர சங்கிகள் Chinmayi with Dr. Pal

Sivabalan Elangovan  :  டாக்டர் பால் - இவர் மீது எனக்கு தொடக்கத்தில் இருந்தேன் நம்பிக்கை இருந்ததில்லை. சில வருடங்களுக்கு முன்பு சிசேரியன்  தொடர்பாக அறிவியலுக்கு புறம்பாக ஏதோ பேசியதை கேட்டேன். ஒரு சோறு பதமென கடந்துவிட்டேன். 
சமூக வலைதளங்களின் கவனஈர்ப்புக்காக எவ்வளவோ போலி அறிவியல் தகவல்கள் வருகிறதல்லவா? அதில் இவரும் ஒருவர் என கடந்து விட்டேன். 
மருத்துவராக இருப்பதனாலேயே போலி தகவல்கள் சொல்ல மாட்டார்கள் என நம்ப முடியாதல்லவா?
ஆனால் சின்மயி அவர்களுடைய நேர்காணல் ஓன்றில் இருவரும் திட்டமிட்டு ஒரு தகவலை எப்படி Misleading செய்கிறார்கள் என பார்த்த போது அதை expose செய்ய வேண்டும் என நினைத்தேன். நேரமின்மையால் அதையும் கடந்து விட்டேன்.

ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான ‘இம்பீச்மெண்ட்’ நாடாளுமன்றத்தில்! பாஜக கடும் எதிர்ப்பு

 மின்னம்பலம் - Mathi :  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்ற மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான தீர்ப்புகளை வழங்கி வருகிறார் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனம். அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பெரும் மத மோதலுக்கான சூழலை உருவாக்கியது என்பதும் இந்தியா கூட்டணியின் விமர்சனம்.

புதன், 10 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் . பின்னணியில் பாஜகவின் ஜனனம் டிவி!

May be an image of text that says "Fellow USO routube 1 திருப்பாங்குன் 1திருப்பாங்குன்ப் ஏம் @Tamil.JanamNews தமிர் Janari peatA ஜனம் டிவி யாருடையது 65K +VIEWS ਮਖ f டிவி அண்ணாமலைக்கு ட்டில் காலூன்றும் RSS கே"

 நவீன நாடோடி  : ஜனனம் டிவி பாஜக உரிமையாளர் மலையாளி
வலது படம் ஜனனம் டிவி பற்றிய செய்திகள் 
திருப்பரங்குன்றம் நேற்று நடந்த நீதிபதி தீர்ப்பு மற்றும் கலவரங்கள் ஏற்கனவே கேரளாவில் முன்கூட்டியே திட்டமிட்டு   நடத்த தயாரான செயல் என எத்தனை பேருக்கு தெரியும்? 
இதற்கு முழுவீச்சில் உடந்தை தமிழ்நாட்டில் புதிதாக தோன்றிய  பாஜக RSS மலையாளி ஜனனம் டிவி உரிமையாளான்!
6 மாதத்திற்கு முன்பே திருப்பரங்குன்றம் கோவில்  பிரச்சினை களை ஜனனம் டிவி கையிலெடுத்து இதை கேரளாவில்  பெரிய விவாத பொருளாக மாற்றி  திமுகவின் பெயரை கெடுக்க திட்டமிட்டு பெரிய டிபெட் நடத்த தயாரானபோது,
அங்குள்ள அரசியல் பேச்சாளர்களை கூப்பிடும் போது அவர்கள் மறுத்துவிட்டனர்

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது

 மதுஷா : : பதுளை பேரழிவில் 14 பேரின் உயிரைக் காத்த நாய்! முன்கூட்டியே சத்தம் செய்து எச்சரிக்கை செய்தது 
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், பதுளை, மாஸ்பண்ண பகுதியில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட ‘சூட்டி’ என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து சுமார் 14 மனித உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 

ஜப்பானில் 7.6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 தினமணி : ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் இன்று (டிச. 8) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திங்கள், 8 டிசம்பர், 2025

சீனாவுக்கு விமானத்தில் செல்லும் இந்தியர்கள் (அருணாச்சல பிரதேஷ்) கவனம்! ஒன்றிய அரசு அறிவுறுத்தல் நமது சிறப்பு நிருபர்

 தினமலர் :  புதுடில்லி : சீனாவுக்கு விமானப் பயணம் செல்லும் போது இந்தியர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது . டில்லியில் மத்திய வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டி:     
ஷாங்காய் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை ( அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் ஷாங்காய் விமான நிலையத்தில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டார் . அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி . எனவே அவரது இந்திய பாஸ்போர்ட்டை செல்லாது என கூறி சீன அதிகாரிகள் கைது செய்தனர் ) தொடர்ந்து , சீன விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் குறி வைக்கப்பட மாட்டார்கள் . அவர்கள் தன்னிச்சையாக தடுத்தும் வைக்கப்பட மாட்டார்கள் , துன்புறுத்தப்பட மாட்டார்கள் . சர்வதேச விமான பயண விதிமுறைகளை மதிப்பதாக சீன அதிகாரிகள் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்

திமுக காங்கிரஸ் கூட்டணி உடைக்கிறதா? 75 சீட் + அமைச்சரவை இடம் + 5 ராஜ்ய சபா.. காங்கிரசின் முக்கோண பார்முலா!

tamil.oneindia.com  - Shyamsundar I  :  சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திடம் (திமுக) காங்கிரஸ் கட்சி உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 
கணிசமான பிரதிநிதித்துவம் கோரும் காங்கிரஸ், மூன்று விதமான பார்முலாக்களை முன்மொழிந்துள்ளது. இதை கேட்டு திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

இலங்கை டித்வா சூறாவளி பற்றி எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம் Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka

 Shanmugam Poothappar : இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்
'டித்வா' சூறாவளி இலங்கைக்கு அண்மையிலுள்ள கடற்பரப்பில் உருவாகிய நாள் முதல் அதன் தாக்கம் தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக த இந்தியன் எஸ்பிரஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி  தங்களுடன் இதனை பகிர்ந்து கொண்டதாக அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது. 
எச்சரிக்கை மற்றும் முன்னெடுப்பபுகள் என்ற தலைப்பில் கடந்த 13ஆம் திகதி இலங்கைக்கு அண்மையில் தாழழுக்க நிலை ஒன்று உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முதன்முதலில் கணித்திருந்தது, மேலும் நவம்பர் 20 ஆம் திகதி புயல்(cyclogenesis) சாத்தியம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டது.Why Cyclone Ditwah caused large-scale damage in Sri Lanka
அதாவது சூறாவளியாக மாறி காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்! கும்பகோணம் - எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' - கதறி அழுத பெற்றோர்

உயிரிழந்த அரசுப்பள்ளி மாணவன் கவியரசன்

 Vikatan  :  கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவன் மூக்கில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.