சனி, 23 பிப்ரவரி, 2019

மாபா பாண்டியராஜன் : நீட் ஒரு தேர்தல் பிரச்சனையும் அல்ல.. இந்தியா டு டே க்கு பேட்டி


A Sivakumar : நீட் விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்படுகிறது.
அது தொடர்பாக பதிலளிக்கும் மாநில அமைச்சர்...அவர்களுடைய அரசால் இயற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாக்களை பற்றி வாயே திறக்கவில்லை.
நீட் ஒரு தேர்தல் பிரச்சனையும் அல்ல என்று ஆணவமாக புறந்தள்ளுகிறார்.
அதனோடு சேர்த்து...இரண்டு பொய்களையும் அடித்து விடுகிறார்.
பொய் 1:
கல்வி பொதுப்பட்டியலுக்கு போனது குறித்தது. அதற்கு திமுக சார்பாக பேசிய திரு.பழனிவேல் தியாகராஜன் பதில் சொல்லிவிட்டார்
பொய் 2:
காங்கிரஸ் திமுக அரசு தான் நீட்டை நுழைத்தது என்ற வழக்கமான பொய் தான் அது.
காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை வேண்டாம் என்று ஒதுக்க மாநிலங்களுக்கு உரிமையளித்தே நீட் கொண்டு வரப்பட்டது. மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் ஆளும் வரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை.
ஏன் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மத்தியில் பாஜக ஆட்சி வந்த பின்பும் நீட் நுழையவில்லை.

மோடி அரசு தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு தந்த போதும் தெளிவாக நிரந்தர விலக்கு கேட்டு ஜெயா கோரிக்கை வைத்தார்.
அவர் மருத்துவமனைக்கு போக...
ஓபிஎஸ் முதல்வராக...
அன்று திருட்டுத்தனமாக யாரிடமும் சொல்லாமல் டெல்லிக்கு போய் தமிழகம் நீட்டை ஏற்கிறது என்ற கையெழுத்தை போட்டவரே இந்த பாண்டியராஜன் தான்.
முன்னாள் பாஜக ஆளாச்சே...
செய்வதையும் செய்துவிட்டு இப்படி பொய் சொல்லிக்கிட்டு அலையும் ஆளுக்கு தான் படித்தவர், பண்பட்டவர் என்ற மரியாதை.
பிச்சைக்காரப்பய...
இவனிடம் இருக்கும் பணமும் பதவியும் அனிதாவின் கால் தூசுக்கு சமம்.

கருத்துகள் இல்லை: