சனி, 23 பிப்ரவரி, 2019

பங்களூர் 300 க்கு மேற்பட்ட கார்கள் தீ பற்றி எரிந்தது .. விமான கண்காட்சியில் விபரீதம் .வீடியோ .. ஒரு விமானியும் உயிரழப்பு

tamil.oneindia.com-  hemavandhana: பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்று 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதற்கு காரணம் சிகரெட்தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மக்கள் ட்விட்டரில் கொதித்து போய் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அரங்கத்திற்கு வெளியேதான் எல்லா கார்கள், பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இப்படி ஒரு தீ விபத்து பட்டப்பகலில் மதிய நேரத்தில் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீயில் வாகனங்களும் சேர்ந்து எரிந்தன< சாம்பல் தூக்கி எறிந்த அந்த ஒத்த சிகரெட்டால், கோடி ரூபாய் கார்கள் கருகி சாம்பலானதை வீடியோ காட்சிகளாக கண்ட பொதுமக்கள் கொதித்துபோய் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.  அந்த படங்களில் எல்லாமே கார்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. கருப்பு புகையும், மஞ்சள் நெருப்பும் என மளமளவென எரிய, அடிக்கும் காற்றில் அது இன்னும் வேகமாக பரவுவதாக உள்ளது

கருத்துகள் இல்லை: