வெள்ளி, 14 டிசம்பர், 2018

பாஜகவுக்கு ரஜினி கொடுத்த அல்வா? ம்ம் ரசிகர்களுக்கும் சேர்த்தே அல்லவா அல்வா!

இந்தியா முழுக்க காலூன்றியும் தமிழகத்தில் ஹேரில் கூட மலர முடியாமல் இருப்பது  நாக்பூருக்கு ஆர் எஸ் எஸ் பாஜக  ) பெரும் அவமானமாக இருந்ததாம்.
தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு நகருக்கு  ( நாக்பூர் ஆர் எஸ் எஸ் ) நிதிப்பிரச்சனையில் சிக்கியிருந்த உச்சத்தை (ரஜினியை) அடையாளம் காட்டியுள்ளனர் துக்ளக்(சோ.ராமசாமி + குருமூர்த்தி)அறிவாளிகள் .
பண உதவி செய்வது போல உச்சத்தின் குடும்பத்தை ( ரஜினி குடும்பம்)  தன் கைப்பிடியில் கொண்டு வந்த காவி அதற்கு கைமாறாக அரசியலில் இறங்கச் சொல்லி வற்புறுத்தியதாம்.
பணப்பிரச்சனை, குடும்பத்தினரின் வற்புறுத்தல், காவிகளின் நெருக்கடி என பல பக்கமும் அடிவாங்கிய உச்சம் ( ரஜினி)  பேரே வைக்காத கட்சியை உப்புக்கு சப்பாக ஆரம்பித்தாராம். தினமும் கட்சி ஆரம்பிக்க சொல்லி போன் செய்து தொந்தரவு செய்கின்றனராம். நிம்மதியாக தூங்க கூட விடாமல் தினமும் பிரச்சனையாம். மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கும் உச்சம் (ரஜினி) ஒரே வருடத்தில் மூன்று படம் நடித்து பொருளாதார சிக்கலில் இருந்தும் ஓரளவு தப்பித்து விட்டார். 
இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் லோட்டஸ் காலி எனும் செய்தி அவரது காதில் தேனாக பாய்ந்துள்ளதாம். பணத்தை கொடுத்துவிட்டு கொஞ்சப் பாடா படுத்துனானுங்க? அடிமை மாதிரில நடத்துனானுங்க. ?
இனி இருக்கு அவனுங்களுக்கு என புலம்பினாராம் உச்சம்( ரஜினி ). அதன் எதிரொலி தான் பாஜக செல்வாக்கு சரிந்து விட்டது எனும் தைரியமான பேட்டியாம். இப்போது சகோதரர் மூலம் அரசியலில் ஆர்வம் இல்லை எனும் பேட்டி வந்ததற்கும் அது தான் காரணம்.
இனி உச்சம்( ரஜினி ) அரசியலுக்கு வருவது பல் இல்லாதவன் பக்கோடா சாப்பிடுவது மாதிரி தானாம்.  இதுதான் புள்ளப்பூச்சிக்குலாம் கொடுக்கு முளைக்கிறதா? காத்தவராயர்

கருத்துகள் இல்லை: