செவ்வாய், 23 மே, 2017

ஐ ஏ எஸ் தேர்வு மாணவி காயத்ரி (அருந்ததியர் )மர்ம மரணம் .. சைதை துரைசாமியின் பயிற்சி மையத்தில் மிரட்டப்பட்ட பெற்றோர்

Vck Akaran :சேலம் மாவட்டம். மேட்டூர் சேலம் கேம்ப். 5 வார்டு பாரதிநகர் தெருவை சேர்ந்த . நாகராஜ் அவர்களின் . மகள் மாணவி. காயத்திரி BE வயது 22 , தலித் சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூக பெண். இவர் சென்னை அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேயம் கல்வி அறக்கட்டளை பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். மாணவி காயத்திரிக்கு உடல்நிலை சரியில்லை என்று பெற்றோருக்கு சக மாணவிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் பதற்றத்தில் பயிற்சி மையத்திற்கு நேரில் சென்ற பார்த்த போது SKS மருத்துவமனையில் காயத்திரி மயக்க நிலையில் சிகிச்சையில் இருந்துள்ளார். பெற்றோர்கள் சென்ற சிறிது நேரத்தில் காயத்திரி மரணமடைந்தார்.

தனது மகள் மர்மமான முறையில் இறந்ததை குறித்து பயிற்சி மைய நிர்வாகத்திடம் முறையிட்டு உரிய விளக்கம் கேட்டதற்கு மிரட்டப்பட்டு
மாணவியின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி உள்ளனர்.
இதை அறிந்த உறவினர்களும் சக தலித் தோழர்களும் ஆம்புலன்சை மறித்து சாலை மறியல் செய்துள்ளனர்.
காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி அருகில்
உள்ள காவல்நிலையத்தில் சந்தேக மரணம் வழக்கு பதிவு
சென்னைக்கு வழக்கை மாற்றுவதாக
உறுதி அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: