திங்கள், 17 ஏப்ரல், 2017

பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாத மாணவர்களால் சக மாணவர் அடித்து கொலை ...


நிர்வாணமாக்கப்பட்டு மாணவன் அடித்துக் கொலை: அதிர்ச்சி வீடியோ..!! பாகிஸ்தானில் மாணவர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் மர்தான் நகரில் அப்துல் வாலிகான் என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் மஷால் என்பவர் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் கடவுளை நிந்திக்கும் வகையான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மர்ம கும்பல் மஷால் கானை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்துள்ளது. அந்த கும்பல் அவரை தாக்கும்போது 10 மாணவர்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர். மேலும் கானை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. மாறாக சக மாணவர்கள் கான் கொலை செய்யப்பட்டதை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் 10 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர் மாலைமளர்

கருத்துகள் இல்லை: