திங்கள், 17 ஏப்ரல், 2017

ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று தமிழகம் வருகை .. அமைச்சர்கள் பதவி நீக்கம்?

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா புகாருக்கு பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மீண்டும் ஆஜராகிரார். இதனிடையே ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தை ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை ஓரம் கட்டவும் இரு அணியினரும் தீவிர முயற்சி செய்து வருவதாகவும்< tamiloneindia

கருத்துகள் இல்லை: