வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சசிகலா ஆட்சி எம் எல் ஏக்களின் தொகுதிகளில் பன்னீர்செல்வம் வாக்காளர் பேரணி !

சென்னை: மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆதரவை பெறும் வகையில் இன்று முதல் வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பேரணி நடத்துவார்கள் என கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் புனித ஆட்சியை மீண்டும் நிறுவ அவரது ஆன்மாவிடம் ஆசி பெற்றுள்ளதாக கூறினார்.

ஜெயலலிதாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இன்று முதல் அனைத்து தொகுதிகளிலும் தங்களின் ஆதரவாளர்கள் ஆதரவை பெறும் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.வகையில் ஊர்வலம் நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் விரும்பாத தற்போதைய ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: