வியாழன், 16 பிப்ரவரி, 2017

எல்லாம் இருந்தும் ஜெயா டிவி சறுக்கியது எப்படி ? அது தூங்கி வழிவதேன்?

ஜெயா ஊழல் பற்றி சொன்னால், உனக்கு தெரியாதா கலைஞர் குடும்பம் ஆசியாவின் பணக்கார குடும்பம் ஆகிவிட்டது, சன் டிவி மதிப்பென்ன, இந்த சொத்து மதிப்பென்ன? என குமுறுகின்றார்கள்
சன்டிவி என்பது தொலைகாட்சி தொழில், எல்லோரையும் போலத்தான் அவர்களும் தொடங்கினார்கள், ஆனால் தொழில்திறமை இருந்தது ஒரு சேனல் 20க்கும் மேற்பட்ட சேனலானது
அதோடு அவர்கள் ஓயவில்லை, எப் எம் ரேடியோ, நாளிதழ் என இறங்கிகொண்டே இருந்தார்கள், அவர்களுக்கு அத்துறை இயல்பாய் வந்தது, சாதித்தார்கள்
அதாவது எழுத்துதுறையின், நாடக துறையின் அடுத்த விஞ்ஞான பரிணாமத்திற்கு மாறிகொண்டே இருந்தார்கள்
சரி ஜெயாவும் டிவி தொடங்கினார், விஜயகாந்த் முதல் தங்கபாலு வரை நடத்துகின்றார்கள், ஏன் இவர்கள் அளவுக்கு வளரவில்லை? ஏன் வளர்ந்தால் என்ன?
முடியாது, அல்லது தொழில் தெரியாது அவ்வளவுதான்
சகலத்தையும் மிரட்டி ஆளும் ஜெயலலிதாவால் தன் டிவியினை வளர்க்க முடிந்ததா? 10 நிமிடம் உங்களால் பார்க்கமுடியுமா? இப்பொழுது மகா மோசம்
நமது எம்ஜிஆர் பத்திரிகையினை படித்தவன் தமிழ் தெரிந்ததற்காக தன்னையே திட்டிகொள்ளமாட்டானா?

கலைஞர் சொத்துக்களாய் குவித்தாராம்..
ஸ்டாலினிக்கு சிறுதாவூர் முதல் கொடநாடு வரை எத்தனை மாளிகைஉண்டு, ஐதரபாத்தில் எத்தனை பங்களா உண்டு? சொல்லமுடியுமா?
அழகிரிக்கு பொறியியல் கல்லூரி இருக்கின்றதாம், தமிழகத்தில் 10ல் ஒருவனுக்கு பொறியல் கல்லூரி இருக்கும் போலிருக்கின்றது அவர்கள் எல்லாம் ஊழல் செய்தவர்களா?
கலைஞரின் இன்னொரு மகன் தமிழரசு இன்றும் முரசொலி நிர்வாகிதான்
தேறாத மகன் முக முத்து இருக்குமிடமே தெரியவில்லை, திடீர் வளர்ப்பு மகனுக்கே கோடிகள் கிடைக்கும் உலகில், சொந்த மகனை ஏன் கண்டுகொள்ளவில்லை, பையனிடம் உருப்படும் திட்டமில்லை அவ்வளவுதான்
விஜயகாந்த், வசந்தகுமார் எல்லாம் டிவி நடத்தும் தமிழகத்தில் கலைஞர் டிவி நடப்பதும் ஊழலா?
2ஜி அலைவரிசை வழக்கு நடக்கின்றது, இன்னும் தீர்ப்பு வரவில்லை, ஆனால் முறையான ஆதாரம் இருந்தால் என்றோ விளாசியிருக்கமாடார்களா?
நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ, முந்தைய சிபிஐ இயக்குநர் மீது ஊழல் வழக்கு தொடுக்கபட்டு விசாரணை நடக்கின்றது, இந்திய வரலாற்றிலே ஒரு சிபிஐ இயக்குநர் மீது விசாரணை நடப்பது இதுதான் முதல்முறை
அதவாது நிலக்கரி முதல் 2ஜி வழக்குவரை யாரையோ தப்புவிக்க அல்லது சிக்கவைக்க ஆதாரமில்லா வேலைகளை செய்தார் என்பது குற்றசாட்டு, அவரின் சொத்துகணக்கும் உயர்ந்திருக்கின்றது
ஆக அந்த ஒரு ஊழல் சிபிஐ அதிகாரி தொடுத்த வழக்குத்தான் 2ஜி எனும்
கொடுமையில் அதன் அடிப்படையே ஆடிகிடக்கின்றது,
அந்த வழக்கு சிக்கலில் நிற்கும் மர்மம் இதுதான்.
பேச எவ்வளவும் பேசலாம்
ஒரு பைசா இல்லாமல் சினிமாவுக்கு வந்த சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் சொத்துமதிப்பென்ன?
சின்னப்பா தேவர் சம்பாதிக்கவில்லையா? எழுதியே சம்பாதித்த கண்ணதாசன் என்ன வகை? (அவரே அழித்தது வேறு விஷயம்)
கும்பகோணத்து சீனிவாசன்,பின் விகடன் சீனிவாசனாக , எஸ் எஸ் வாசனாக சம்பாதித்தென்ன?
பத்திரிகை நடத்திய ஆதித்தன் குடும்பம் கோடிகளை குவித்தது எப்படி?
இதெல்லாம் சாத்தியம் எனில் கலைஞரின் எழுத்தும், வசனமும் சம்பாதித்திருக்காதா? இவர்களை விட மிக அதிகம் சம்பாதித்திருகுமல்லவா?
பின் அவர் பிள்ளைகள் வீடு கட்டவும், பேர பிள்ளைகள் படமெடுக்கவும் என்ன கஷ்டம்?
ஸ்டாலினின், அழகிரியின், கனிமொழியின் தந்தை எஸ் எஸ் வாசன் , கலைவாணர், சிவாஜி, எம்ஜிஆர் காலத்திலே அவர்களுக்கு நிகராக சம்பாதித்தவர், மறுக்க முடியுமா?
ஆனால் சசிகலா தந்தையோ, பாஸ்கரன், இளவரசி தந்தையார் என்ன கொடுத்தார்கள்? எப்படி வந்தது இவ்வளவு சொத்துக்கள்?
இது பட்டவர்த்னமாக தெரியாதா?
கவனியுங்கள், எத்தனையோ வசனகர்த்தா தோற்ற இடத்தில்தான் கலைஞர் ஜெயித்தார், டிவியினை எப்படி சமாளிக்க என தெரியாமல் இன்றைய டிவி நிலையங்கள் தலையினை பிய்க்கும் பொழுதும் சன்டிவி ஜொலிக்கின்றது
அவர்களும் எப் எம் முதல் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் இறங்கி அடித்தார்கள், ஜெயா என்ன செய்தார்? அவருக்கு எப் எம் ரேடியோவாக சி.ஆர் சரஸ்வதியும், நாஞ்சில் சம்பத்தும் கிடைத்தார்கள்.
அப்படி மாறன் குடும்பத்தின் தொழில்திறமை வேறு, ஆனால் டெல்லி சூனியம் வைக்கபட்டபின் அவர்கள் கொஞ்சம் மிதக்க, தட்டி வைத்தார் கலைஞர்
ஆக தொழில்திறமை என்பது வேறு, ஊழலில் சம்பாதிப்பது வேறு
இன்னும் கலைஞர் ஊழல்வாதி, அப்படி இப்படி என சொல்லிகொண்டே இருப்பீர்களானால் உங்களுக்கு சிந்திக்க தெரியவில்லை என பொருள்
அதாவது அவரை மனதால் ஊழல்வாதி ஆக்கிவிட்டு காரணம் தேடுகின்றீர்கள் என் பொருள்.
அதன்பின் எப்படி திருந்துவீர்கள்? திருந்தியதாக நடிக்க கூட
By Stanley Rajan Prakash JP முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: