வியாழன், 16 பிப்ரவரி, 2017

இது உங்க மேல சத்தியம்மா. .. இந்த சிங்கம் அஞ்சாது சமாதியில் சசிகலா !

1.JPGபெங்களூரு கோர்ட்டில் சரணடைவதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது  நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா,  சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார். பின்னர் ஆவேசமாக முணுமுணுத்தார். பின்னர் ஏதும் பேசாமல் வேகமாக காரில் ஏறிச் சென்றார். அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் கவனித்ததில், ஓங்கி ஓங்கி சத்தியம் செய்ததற்கு பின் சசிகலா வாய்விட்டு பேசியது  இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.“இது உங்க மேல சத்தியம்மா. இந்த சிங்கம் அஞ்சாது
இதில் அஞ்சாது என்கிற வார்த்தையை சற்றே உரத்த குரலிலேயே சசிகலா கூறுகிறார். பின்னால் இருப்பவர்களின் கோஷங்கள் காரணமாகவே, அவர் பேசுவது சரியாக கேட்காமல் போகிறது. thetimestamil.com

கருத்துகள் இல்லை: