ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஒ.பன்னீர்செல்வம் : விஜயகாந்த் அரசியல் வியாபாரி பேரம் பேசி வருகிறார்

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் வியாபாரி என்றும் அவர் தற்போது அரசியல் பேரம் பேசி வருவதாகவும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் பெரிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நேரிடையாக தொடங்காமல் இருந்தன.  இதனிடையே திமுக தலைவர் கருணநிதியை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து திமுக. காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. தற்போது கூட்டணி மட்டும் உறுதியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் விஜயகாந்த் எப்படியும் திமுக கூட்டணிக்கு வந்துவிடுவார் என திமுக நம்புவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக மட்டும் மவுனமாக இருக்கிறது.  பன்னீரு குனியிற அளவை பாத்தா இந்த ஆளு நிச்சயம் தில்லாலங்கடிதான் பாவம் ஜெயலலிதா ஏன்தான் இந்த கூழை கும்பிடு போடுரவுங்களை நம்புராய்ங்களோ?
ஒருவேளை தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணி குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மண்டல அதிமுக வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் முடிவும், மாற்றமும் மதுரையை மையமாக வைத்தே நடந்துள்ளது. அதிமுகவை முடக்க திமுக தலைவர் செய்த எத்தனையோ சோதனைகள், தடைகளை முதல்வர் ஜெயலலிதா தடுத்து இயக்கத்தைக் காப்பாற்றியுள்ளார். திமுக ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்குகளை சட்டத்தின் மூலம் சந்தித்து வெற்றி பெற்றுள்ளார். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். ஜெயலலிதா பார்த்துக்கொள்வார். யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் சரி. அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜயகாந்த் அரசியல் வியாபாரி. அவர் அரசியல் பேரம் செய்கிறார். ஒரு நல்ல தீர்ப்பை மக்கள் தருவார்கள். அந்த தீர்ப்பை பெற தேர்தல் பணியாற்றுவோம்'' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினா
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: