ஞாயிறு, 10 ஜனவரி, 2016

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது
குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். தில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் நடத்தி வந்தது. இப்போது அந்த அமைச்சகத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்தியது.
< தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென யோசனை தெறிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
மேலும், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்ப அரசு ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். தினமணி.com

கருத்துகள் இல்லை: