செவ்வாய், 12 ஜனவரி, 2016

மேற்கு வங்காளத்தில் மதச்சண்டை...3 மாவட்டங்களில் இந்துக்கள் இப்போ சிறுபான்மை..

நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறைக்குக் காரணம் அஞ்சுமன் அஹ்லே சுன்னத் ஜமாஅத் என்ற தீவிரவாத அமைப்பு. இதற்கு பின்புல அரசியல் ஆதரவு தர ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. எல்லாம் ஒட்டுமொத்த ஓட்டு படுத்தும் பாடு!
கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி
கமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி
2015, அக்டோபரில் மாட்டிறைச்சி உண்டார் என்பதால் ஒரு இஸ்லாமியர் உ.பி.யில் கொல்லப்பட்டபோது நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்ததை நாடறியும். அந்த நிகழ்வை வைத்துக்கொண்டு மோடி அரசை கடுமையாக விமர்சித்த அவர்கள், இப்போது எங்கே போனார்கள்? கும்பலாகத் திரண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தான் தாத்ரியிலும் நிகழ்ந்தது. அதன் எண்னிக்கை தான் வித்தியாசம். இப்போது, மால்டா மாவட்டம் பற்றி எரிகிறபோது, இதை ஊதிப் பெரிதாக்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள்.


பங்களாதேஷை ஒட்டிய மாவட்டமான மால்டாவுக்கு மதக்கலவரங்கள் புதியதல்ல. டெகங்கா (2010), கன்னிங் (2013) கலவரங்கள் மாநில அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவை. பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய முஸ்லிம்கள் பலர் இந்திய குடியுரிமை பெற்று மால்டா மாவட்ட மக்கள் தொகையில் 50 சதவீதத்தை விட அதிகமாகப் பெருகியது தான் பிரச்னையின் ஆணிவேர்.
இப்போது மால்டாவும் (காளியாசாக்) சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது; இஸ்லாமியர்களின் மிரட்டல் அரசியலுக்கு உதாரணங்களுள் ஒன்றாக சேர்ந்துவிட்டது. ஏற்கனவே, ஏதோ ஒரு வெளிநாட்டில் முகமது நபி குறித்து வரையப்பட்ட கேலிச்சித்திரத்துக்காக நமது சென்னையின் மவுன்ட் ரோட்டில் முஸ்லிம் குண்டர்களால் வன்முறையாட்டம் ஆடப்படவில்லையா? ஃபிரான்ஸில் பர்காவுக்கு தடை விதித்ததற்காக காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுகள் நடக்கவில்லையா?
பொதுச் சொத்துகள் சேதம்
பொதுச் சொத்துகள் சேதம்
இஸ்லாமியர்கள் உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் இப்படித் தான் இயங்குகிறார்கள். இன்று ஃபிரான்சும், பெல்ஜியமும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொண்டு கண்கொத்திப் பாம்பாக விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் வரும் பயணிகளை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த அச்சமே இஸ்லாமிய அமைப்புகளின் பலம்.
அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்தவே இந்த வன்முறை மால்டாவில் அரங்கேற்றப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் மோடியைக் கீழ்த்தரமாக விமர்சித்தும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் கோஷமிட்டிருப்பதில், அவர்களின் பின்னணி புரிகிறது. இவர்களைத் தட்டிக் கேட்க மாநில முதல்வர் மமதாவுக்கு திராணி இல்லை. தவிர, அவரே வாக்கு வங்கி அரசியலில் சோரம் போய்விட்டார்.
நாடு முழுவதும் பாஜக தவிர்த்த கட்சிகளிடம் கானப்படும் ஊசலாட்ட மனநிலையின் வெளிப்பாடு இது. இதை நன்கு உணர்ந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தேச விரோதப் பிரசாரத்தை எந்தத் தடையுமின்றி கட்டவிழ்த்து விடுகின்றன. இதைக் கண்டிக்க வேண்டிய ஊடகங்களும் வாய் பொத்தி மௌனம் சாதிக்கின்றன. இந்த கலவரத்தில் பாஜகவுக்கு எதிராக ஏதும் இல்லாததால் அவர்கள் அமைதி காக்கிறார்கள் போலிருக்கிறது.
ஓட்டு படுத்தும் பாடு!
ஓட்டு படுத்தும் பாடு!
காளியாசாக் கிராமத்தில் வன்முறை வெறியாட்டம் முடிந்து ஒருவாரம் ஆகியும் கடைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. (ஜன. 10 நிலவரம்). வீடுகளை விட்டு வெளிவரவே உள்ளூர் ஹிந்துக்கள் அஞ்சுகிறார்கள். 144 உத்தரவும், அதிரடிப் படையினர் குவிப்பும் தான் இப்போது அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
எனவே, அரசின் கடமைகளை உணர்ந்து கலவரக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை மமதா நிலைநாட்டவேண்டும். தற்போது பெயரளவுக்கே வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 130 ரௌடிகளில் 10 பேர் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது. இதை தட்டிக்கேட்ட மாநிலத்தின் ஒரே பாஜக எம்.எல்.ஏ.வான ஷமிக் பட்டாச்சார்யா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இது தான் ஜனநாயக இந்தியாவா?
நெருப்புடன் விளையாடுவோர் தீக்காயம் அடைவது உறுதி. பஞ்சாபில் பிந்தரன்வாலேவை வளர்த்துவிட்ட இந்திராகாந்தி சீக்கிய அடிப்படைவாதத்துக்கே பலியானார் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் லாபங்களுக்காக நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைப்பவர்கள், பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இதை மேற்கு வங்க மக்கள் உணராதவரை, இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்; மோசமான அனுபவங்கள் சரித்திரத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கும்

கருத்துகள் இல்லை: