செவ்வாய், 7 ஏப்ரல், 2015

சோழர்களுக்கு முன்பே உருவான பல்லவர்கள் ஈழத்தவர்கள்! யாழ் குடாநாடுதான் மணிபல்லவம்? மறைக்கப்பட்ட வரலாறு?

சிவமேனகை : புத்தர் இலங்கைக்கு வந்த கி மு 6 ம் நூற்றாண்டு காலத்தில் ஈழத்தில் 3 கோடி நாகர்கள் இருந்தார்கள் என்று வரலாற்றில் வருகின்றது.அதன் பின்னர் கி மு 200/300 இல் ஈழத்தை தாக்கிய 4காவது மிக பெரிய கடல் அழிவு ஈழத்தின் வட பகுதியையும் வட மேற்கு பகுதியையுமே பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது என கருதப்படுகின்றது. இந்த காலத்தில் கடல் அழிவில் தப்பி பிழைத்த மக்கள் தொண்டை மண்டலத்தில் சென்று வாழ்ந்தார்கள்.
இவர்கள் தொண்டை மண்டலத்துக்கு சென்று வாழ்ந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது.அந்த காலத்தில் அந்த பகுதியை ஆண்ட சோழ அரசன் கிள்ளி வளவன் (சிலர் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் சிலர் இவன் மகன் நெடும் கிள்ளி என்றும் எழுதி இருக்கின்றார்கள் )ஈழத்து மணிபல்லவ நாக இளவரசி பீலியவளையை திருமணம் செய்து இருந்தான்.அவர்களுக்கு பிறந்த மகன் பிற்காலத்தின் தொண்டமான் இளம்திரையன் என அழைக்கபட்டவனும் இந்த கடல் அழிவில் குழந்தையாக தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தவன். இளமையில் (குழந்தையில்) திரையில்(அலையில்)அகப்பட்டு வந்ததால் காரண பெயர் இளம்திரையன்.எனவே அவனுடன் திரையில் பாதிக்க பட்டு வந்த மக்களும் தொண்டை மண்டலத்தில் வந்து வாழ்ந்தார்கள்.இவன் வந்த பின்னரே இந்த இடத்துக்கு தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.
அதற்கு ஈழத்தின் தொண்டைமானாறு பற்றி குறிப்பிட்டும் கடல் அழிவால் இலங்கையின் தொண்டை போன்ற வடிவில் அமைந்த பகுதியில் இருந்து வந்தவன் என்பதாலும் தொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்றும் கருத்து இருக்கிறது.
ஒரு காலத்தில் இலங்கை பூராக மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்றும் யாழ் குடாநாடுதான் மணிபல்லவம் என்றும் அதில் ஒரு தீவு தான் மணி பல்லவம் என்றும் பல கருத்துக்கள் இருந்தாலும் மணிபல்லவம் என்பது ஈழம் சார்ந்தது என்பது உறுதி.

மணி பல்லவத்தில் இருந்து தொண்டை மண்டலத்துக்கு வந்தகாலத்தில் இவர்கள் சோழர்களுக்கு போர்களில் உதவியாக இருந்தார்கள்.அதனால் சோழராச்சியம் மிகவும் விரிவடைந்தது. சோழ ராச்சியம் விரிவடைந்து சில காலத்துக்கு பின் தொண்டை மண்டலத்துக்கு இளம்திரையன் அரசன் ஆனான். பின்னர் சோழர்களுக்கு வம்ச குழப்பம் ஏற்பட்டு சோழ ராச்சியம் இரண்டாக பிரிக்கபட்டு காஞ்சி புரத்திலும்,உறையூரிலும் இரு அரசாக இயங்க தொடங்கியது காலபோக்கில் இவர்கள் மோதி நிற்க ஈழத்தில் இருந்துவந்தவர்கள் இளம்திரையனுக்கு பின்னர் பல்லவர்களாக உருவெடுத்தார்கள்.

தமிழக மற்றும் ஆந்திர ஆய்வாளர்கள் பல்லவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்ற உண்மையை மறைக்க பல தரப்பட்ட பொய்களை கொண்டுவந்தார்கள்.சிலர் பல்லவர்கள் தமிழர்களே இல்லை என்ற கருத்தை கூட முன்வைத்தார்கள்.சிலர் பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூட பொய் சொன்னார்கள்.பக்கத்தில் இருந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்கள் தென்னிந்தியாவை அண்ணளவாக 700 வரிடம் ,(கி பி 225 /கி பி 912)சிற்ரரசாகவும்(225/575 தொண்டை மண்டலம் )(575/846 தென்னிந்தியா முழுவதும் பேரரசாகவும் பின்னர் 846 /912 சிற்ரரசாகவும் ஆண்டார்கள் என்பதை சொல்ல ஏற்றுகொள்ள மனம் இல்லை.அதனால் இன்றுவரை வரலாற்று குழப்பம் தொடர்கின்றது.

தென்னிந்தியா என்றால் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் தான் என்ற மூவேந்தர் மாயை 700 வரிடம் தென்னிந்தியாவை ஆண்ட பல்லவர்களான ஈழத்தமிழர்களை ஏற்றுகொள்ள மறுக்கின்றது.

பல்லவர்கள் ஒருபோதும் சோழர்களை ஏமாற்றி அரசை பறித்தவர்கள் அல்ல.உதவியவர்களுக்கு துரோகம் செய்தவர்களும் அல்ல. சோழர்கள் இரண்டு பட்டு நின்ற வேளையில் பாண்டியர்களும் அவர்களோடு மோதி நின்றார்கள். இவர்கள் தொண்டை மண்டலத்தில் சிற்றரசாக தனித்து செயற்பட தொடங்கியகாலம். அண்ணளவாக இளம்திரையனுக்கு 400 வருடங்களுக்கு பின்னர் ஆகும்.(இளம்திரையன் காலம் கி மு 225) (பல்லவர்கள் தனித்து செயற்பட தொடங்கியது கி பி 225 )அதுவரை இளம் திரையன் வம்சத்துக்கு உதவியாக இருந்து இருக்கின்றார்கள்.கி பி 225 அளவில் இந்திய வடக்கில் இருந்து வந்த களப்பிரர்கள் தமிழகத்தின் பகுதிகளை கைப்பற்ற சில பத்து ஆண்டுகளாக போராடி 250/300 அளவில் தொண்டை மண்டலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை கைப்பற்றினார்கள்.இவர்களுக்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்களுக்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தும் போர் நடந்தது கி பி 575 இல் களப்பிரர்களை முழுமையாக அழித்து முழு தமிழகத்தையும் பல்லவர்கள் கைப்பற்றினார்கள்.

 களப்பிரர்கள் ஆண்டகாலத்தை தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (கி பி 250/575)என்று அழைக்கின்றார்கள். இந்த காலத்தில் தான் கடை சங்கம் முடிவுக்கு வந்தது.தமிழ் மொழி வளர்சி முழுமையாக தடைபட்டது. சைவ கோவில்கள் இடிக்கப்பட்டது.
சைவ சமயத்தவர்கள் தாக்க பட்டார்கள்.காளாமுகர்கள், கபாலிகர்கள் என புதிய பல்வேறு சமயங்கள் உருவாகியது. மொத்தம் 72 சமயங்கள் என்று சில குறிப்புக்களில் வருகின்றது.இவர்களிடம் இருந்து தமிழகத்தை கி பி 575 இல் முழுமையாக மீட்டு தமிழக தமிழர்களின் வாழ்வை உறுதிப்படுத்தி கட்டிட கலைகள் சிற்ப கலைகள் ஓவிய கலைகள் என கலைகளை வளர்த்து, நாயன்மார்களை ஆதரித்து பக்தி இலக்கியங்களை தோற்றுவித்தவர்கள்

பல்லவர்கள்.பல்லவர்களின் காலத்தில் தான் பல சக்தி இலக்கியங்களை இயற்றிய ஆதி சங்கரரும் வாழ்ந்தார்.(சங்கரர்காலம் கி பி 788/820) இவர் தமிழ் உலகிற்கு செய்தது மகத்துவமான சேவை சமய போட்டியால் நலிவுற்று சண்டை இட்டு கொண்டு இருந்த சமயங்களில் மாற்று கருத்து கொண்டவர்களை வாதத்தில் வென்று ஒத்துழைத்து நின்ற 6 சமயங்களை ஒன்றாக இணைத்து இந்துமதம் என்பதை தோற்றிவித்தார்.

எனவே தமிழக வரலாற்றில் பல்லவர்கள் வரலாறு ஒரு முக்கியமான வரலாறு அவர்கள் இல்லாது இருந்தால் இன்றைக்கு தமிழ் மொழியும் எமது கலைகளும் தலைகீழாக மாறி இருக்கும்.
தொடர்ந்தும் மூவேந்தர்கள் என்று சேர சோழ பாண்டியர்களை மட்டும் புகழ்ந்து கொண்டு இருக்காமல் அண்ணளவாக 700 ஆண்டுகள் தனித்தும் அதற்கு முதல் 400 ஆண்டுகளாக சோழர்களுடன் இணைந்து பல்லவர்கள் என்ற பெயரை பாவிக்காமல் சோழர்களுக்கு உதவியாக தென் இந்தியாவை ஆண்ட பல்லவர்களை வரலாற்றில் சிறப்பிக்க வேண்டும்.இவர்கள் கடல் அழிவால் தொண்டை மண்டலம் வந்த பின்னரே (கி மு 200/300)இன்று தமிழ் கூறும் நல்லுலகம் வைத்திருக்கும் அநேகமான நூல்கள் உருவாகின இதை யாரும் மறுக்க முடியாது.தொல்காப்பியம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி மகாபாரதம் ,இராமாயண இதிகாசம் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி சங்க இலக்கியங்கள் அகநானூறு புறநானூறு தொடங்கி ஐம் பெரும் காப்பியங்கள் வரை அனைத்தும் எழுத்துவடிவம் பெற்றதாயினும் சரி எல்லாம் சிந்தித்து பார்த்தால் இவர்கள் வருகைக்கு பின்னரே ஏற்பட்டது.

அதுவரை எழுத்துவடிவம் பெறாமல் செவிவழியாகவே சொல்லப்பட்டு வந்தது.  எனவே இலக்கியங்கள் எழுத்துவடிவ தோற்றத்துக்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு மிகவும் இருந்து இருக்கிறது என்பது வெளிப்படை.

இதிகாசங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் மூல பிரதிகள் வட மொழியில் இருக்கின்றது என்பதால் இவற்றை எழுதியவர்கள் வடவர்கள் என்று கூறுகின்றார்கள். வட மொழியான சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை சொந்த எழுத்துவடிவம் இல்லை.இது தெளிவான ஒன்று அவர்களிடமே சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
அவர்கள் எழுதும் எழுத்து வடிவம் நாகலோகத்து நாகர்கள் உருவாக்கிய நாகரி எழுத்துவடிவம் இந்த நாகரி எழுத்துவடிவத்தை கொண்டுதான் இதை கண்டு பிடித்த தமிழர்கள் (பண்டைய நாகர்கள் எந்த கலப்பும் இன்றி முழுமையாக தமிழர்கள்)பண்டைய காலத்தில் தமிழை எழுதினார்கள்.

பின்னர் பிற்காலத்தில் இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துவடிவத்தை கண்டு பிடித்ததும் தமது மூதாதையர் கண்டு பிடித்த எழுத்து வடிவத்தை சமஸ்கிரிததுக்கு கடன் கொடுத்துவிட்டு ,இன்று வட மொழி என்று வேறு கூறுகின்றார்கள்.(ஒரு எழுத்துவடிவத்தை கொண்டு பல மொழிகளை எழுதலாம்.உதரணத்துக்கு நாகரி யை இப்ப தேவநாகரி என்று மாற்றி அந்த எழுத்துவடிவத்தை கொண்டு இந்தியாவிலேயே பல மொழிகளை எழுதுகின்றார்கள்.மேற்கு உலக நாடுகளில் ஆங்கில எழுத்தை கொண்டு பல நாட்டு மொழிகளை எழுதுகின்றார்கள்)


முதல் தோன்றிய இலக்கியங்கள் நாகரி எழுத்தில் அதில் தேர்சி பெற்று இருந்த நாகர்கள் வாழ்ந்த மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்களின் உதவியோடு எழுதியதை பிற்கால சோழர்காலத்தில் (கி.பி 846 பின்) இன்றைய தமிழ் நெடும் கணக்கு எழுத்துக்களில் எழுதினார்கள். இந்த மொழி மாற்றம் செய்த பொழுதுதான் வரலாறுகள் வடவர்களுக்கு சார்பாக அனேகமாக மாற்றம் பெற்றது. இதற்கு காரணம் பிற்கால சோழர் காலத்தில் நாம் இன்று வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று பார்பனர்கள் என்று சொல்பவர்களை கோவில் பூசைக்களுக்கும் அரச காரியங்களுக்கும் அழைத்துவரும் முறை தொடங்கியது.அந்த காலத்தில் தான் தேவதாசிகள் முறையும் தொடங்கியது.இதற்கு முற்பட்ட காலங்களில் பிராமணர்கள்(பட்டர்கள் ) என்ற பெயரில் கோவில்களுக்கு பூசை செய்தவர்கள் பண்டைய தமிழர்களில் தோன்றியவர்கள் வடவர் கலப்பு இல்லாதவர்கள்.

வடக்கில் இருந்து வந்த பார்பனர்கள் அரசர்களை புகழ்ந்து பாடும் மரபை ஏற்படுத்தி புகழ்மாலைகளை பாடி அவர்களை வர்ணனைகளால் மூளை சலவை செய்து தாங்கள் நினைத்ததை வரலாறுகளில் எழுதினார்கள். இந்தவகையில் எழுதப்பட்டதே புராண இதிகாசமாக இன்று நாம் வாசிக்கும் புத்தகங்கள்.மூலநூல்களை தாங்கள் எடுத்து கொண்டு போனார்கள்.அதை தழுவி எழுதுகின்றோம் என்று எம்மவர்களை ஏமாற்றினார்கள். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தமிழர்களை அரக்கர்கள் குரங்குகள் என்று கூறியது இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.
ஈழத்தில் மணிபல்லவத்தில்(இதில் வரும் மணிபல்லவம் யாழ் குடாநாடு முழுவதும் அமைந்த பகுதியாக இருக்கும் ) இருந்து வந்த தமிழர்கள் பல்லவர்கள் என்ற வரலாற்றை மறைக்க முயற்சித்து இன்று

தென்னிந்தியர்கள் பல வரலாற்றை இழந்து நிற்கின்றார்கள்.அந்த வகையில் மறைக்க முயற்சித்தே திருவள்ளுவர் உண்மை பெயர் தாய் தந்தையர் பெயர் என்பனவற்றையும் அழிய விட்டு இருக்கின்றார்கள்.சிறந்த எழுத்துவன்மை கொண்ட திருவள்ளுவர் தனது விபரங்களை எங்காவது எழுதிவைக்காமல் இருந்து இருக்க மாட்டார்.திருவள்ளுவருக்கு பல நூற்றாண்டுகள் முற்பட்ட திருமூலர் விபரங்கள் வைத்து இருக்கின்றார்கள் வேறு பலருடைய விபரங்கள் வைத்து இருக்கின்றார்கள். வள்ளுவர் பற்றிய விபரங்கள் மட்டும் இல்லை.ஏன் இல்லை என்று சந்தேகிக்கும் பொழுது பல்லவர்கள் வரலாறுகள் மறைக்கப்பட்டது போல திட்டம் இட்டே இவரது வரலாறும் மறைக்கப்பட்டதா என்று சிந்திக்க தோன்றுகின்றது ,

,,அவ்வாறு மறைக்கபட்டதால் இவரும் ஈழத்தவர்கள் வம்சத்தில் வந்தவரா என்ற சந்தேகம் எழுகின்றது. இவரது குலம் தூய நாகர் குலமாக இருப்பதால் அந்த சந்தேகம் வலுப்பெறுகின்றது.இவர் பிறந்த காலம் கி மு 31 ஆண்டாக கணிக்கபட்டு இருப்பதால் மணிபல்லவத்தில் இருந்து ஈழத்தவர்கள் வந்து அண்ணளவாக 2 நூற்றாண்டுகளுக்கு பின்னர் வருவதால் இவர் ஈழத்தவர் வம்சத்தில் வந்தவராக இருக்கலாம். ,,,,,,அறிஞர்களே தெய்வ புலவர் திருவள்ளுவர் தென்னிந்தியர் தான் என்று வாதாடுவீர்களாயின் அதை உறுதிபடுத்த அவர் வரலாற்றை தேடி வெளிக்கொண்டுவாருங்கள் ,,,நன்றி வணக்கம் ,,,,,,,,,,,,சிவமேனகை ,,,,,,,

கருத்துகள் இல்லை: