சனி, 15 பிப்ரவரி, 2014

வித்யாபாலன்: உறவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை.

சென்னை:சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான ‘டர்ட்டி பிக்சர்ல் சில்க்காக நடித்தவர் வித்யாபாலன். இவர் சினிமா தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை கடந்த 2 வருடத்துக்கு முன் மணந்தார். மீண்டும் நடிக்க வந்த வித்யாபாலன் அளித்த பேட்டியில் கூறியதாவது:கணவருடன் ஒரே வீட்டில் இருந்தாலும் ரூம் மெட்போல்தான் வாழ்கிறோம். பணி காரணமாக இருவருமே காலையிலேயே வெளியில் சென்றுவிடுவோம். ரூம்மெட்கள் போல் அவ்வப்போது சந்திப்போம். சினிமாவில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தால் கணவர் எதிர்ப்பு தெரிவிப்பாரா என்கிறார்கள். திருமணத்துக்கு முன்புகூட நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் சூழல் ஏற்பட்டால் முதலில் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்.
அப்போதுதான் படம் பார்க்கும்போது அவர்களும் அக்காட்சியை ஏற்க முடியும். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் அது பற்றி சித்தார்த் ராயிடமும் சொல்லிவிட்டுத்தான் நடிப்பேன். அவர் எதையும் ஜோவியலாக எடுத்துக்கொள்வார். குழந்தை பெற்றுக்கொள்வதுபற்றி கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பை நான் இன்னும் ஏற்படுத்தி தரவில்லை. தாம்பத்ய உறவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை. இந்த ஆண்டு நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கறேன். எனவே அம்மா ஆகும் வாய்ப்பு இன்னும் தள்ளிப்போகும்.
இவ்வாறு வித்யா பாலன் கூறினாtamilmurasu.org

கருத்துகள் இல்லை: