வியாழன், 24 நவம்பர், 2011

நீரா ராடியாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் பற்றி ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி, டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா,
பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா ஆகியோரிடம் விசாரிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எம்.பர்ஹான் என்ற பத்திரிகையாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் நடைபெற்று வருவதால், அதன் தன்மை பற்றி தெரியாமல் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்

கருத்துகள் இல்லை: